வெள்ளிகிழமைகள் கோவில்கள் போவதுண்டு... சுவாமிகள் மீதான பக்திகளும் கும்பிட வரும் நறுமணப் பெண்கள் மீதான ஓர் இனம் புரியாத கவர்ச்சிகளும் கலவையான ஓர் அற்புத மனநிலையில் ஒவ்வொரு வெள்ளியும்.... சில நேரங்களில் கர்ப்பகிரஹத்தை கவனிக்கத்தவறி விடுவது கூட உண்டு., கும்பிட வரும் பெண்டிர்களை தரிசிக்கத்தவறுவதே இல்லை...
காமத்திற்கான பிரத்யேக நிறைவு வயது என்று எதுவும் இல்லை என்பது அறிவியலாக படிக்கையில் ஆனந்தமாக உணரப்பட்டாலும், நம்மை ஈர்த்த ஒரு சிட்டை , விவஸ்தை அற்று ஓர் கிழம் உரசிக்கொண்டு நிற்கிறதென்றால் வருது பாரு ஒரு சூடு... அறுபது டிகிரி செல்ஷியஸ் நு நினைக்கிறேன்...
பெரியவர் என்கிற போர்வையில் பலரும் தன சபலங்களை சற்றும் இங்கிதமே அற்று அரங்கேற்றுகிற காட்சிகளை பல பொது இடங்களிலும் கவனித்திருக்கிறேன்...
தன் மகளை ஒத்த வயதுள்ள பெண்களைக் கண்டாலும் கூட கண்களில் காமம் கொப்பளிக்க இருப்பதைப்பார்க்கையில் ak 47 எடுத்து ஒரு பிடி பிடிக்கலாம் என்று தோன்றும்...ஓர் இயற்கை உந்துதல் இது என்கிற நியாயம் ஒரு புறம் இருந்தாலும் , அப்படி என்ன ஒரு வெறி என்கிற அசூயை ... ஓர் தெரு நாயைப்போல...!!
நாமும் இப்படி தன்னை இழந்த ஓர் அஜாக்கிரதை தருணங்களை எதிர்காலமொன்றில் தரிசிக்கிற சூழல் ஏற்படக்கூடும்.. என்னைப்போலவே எவராவது கவனித்து ப்ளாக் எழுதி மானத்தை வாங்கக்கூடும்... எது எவ்வாறாயினும் மலரினும் மெல்லிய அந்தக்காமத்தை துஷ்ப்ரயோகம் செய்கிற கேவலமான ஓர் தன்மைக்கு நான் இலக்காகி விடக்கூடாது என்கிற பிரார்த்தனை ஒவ்வொரு கோவில் பிரவேசத்தின் போதும் எனக்குள் ஏற்படாமல் இல்லை....
சுந்தரவடிவேலு....
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...
-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
பிச் சை எடுப்பதற்கென்று தகுதிகளாக "ஊனங்கள்" நிர்ணயிக்கப் பட்டுள்ளன.. உழைக்க சோம்பி பிச்சை எடுப்பவன் ஏதேனும் ஒரு கட்டத்தில் தோ...
-
halo vijayshanker, thanks for yr introduction of a blog to me vijay.
No comments:
Post a Comment