Saturday, April 3, 2010

nothingness..வெறுமை...

வெறுமையின் வீச்சில் ரசனைகள் பொசுங்கின... காலத்தின் மௌன ஓலமாய் வெறுமை ஓர் பேரண்டமாய் வியாபித்து வார்த்தைகளுள் பிடிபடாத ரகளைகளை மனசுள் நிகழ்த்திக்கொண்டிருக்கிறது...
கானலின் தகிப்பு போல ஜொலிக்கிறது வெறுமை... நிழலைக்காட்டிலுமான சூனியத்தில் வெளிச்ச வேஷம் தரித்துக்கொண்டு மினுமினுக்கிறது வெறுமை... ஏதோ புயலுக்கான  சமிக்ஞை போன்றும் புலனாகிறது, பெரிய ரணகளம் நிறைவுற்றதற்கான தடயம் போலவும் பாவனை காட்டுகிறது வெறுமை...

அதன் தன்மையில் விக்கித்து நிற்கையில், அதன் தீவிரத்தில் உடைந்து கிடக்கையில், அதன் நுட்பத்தில் மூர்ச்சையாகிக்கிடக்கையில்...
சுற்றி இருப்பவர்கள் எல்லாரும் சலித்துக்கொள்கிறார்கள்.., சாணி மாதிரி சும்மா கிடப்பதாக அபிப்ராயம் தெரிவிக்க அவசரப்படுகிறார்கள்... வெறுமை யினின்று மீள்வதற்கான வழி வகைகளை செய்ய வக்கற்று, வார்த்தைகளால் சாகடிக்க முயன்று பார்க்கிறார்கள்...

நீர்வீழ்ச்சி போலவும் உணரப்பட்டது வெறுமையை... எரிமலை குழம்பாகவும் உணரப்படுகிறது... எல்லா பரிமானங்களுக்கான  யோக்யதைகளுடனும் வெறுமை இருப்பது சற்று வினோதம் என்ற போதிலும் , அதனின்று வெளிப்பெயர்ந்து ஓர் தொழில் முனைபவனாக , எதையேனும் சாதிக்கிற தாகம் கொண்டவனாக , குறைந்த பட்சம் ஓர் நாய்க்கு அடிமையாக இருப்பதற்கான முஸ்தீபாவது கொண்டிருந்தால் தான் பெற்றவளும் பிறந்தவளும் கட்டியவளும் மதிக்கிற சூழல் இந்த சமூகத்தில்..

சுந்தரவடிவேலு..

2 comments:

  1. thanks for your question ravi.. but ravi, my imaginations will goes on like this, even when my situations seems to be in good conditions also..

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...