Monday, March 1, 2010

அந்தரத்தில் சுவடு தேடுபவர்கள்..

சில விஷயங்கள் மனசுள் அனாவசியமான ஓர் படிமானம் அடைந்து விடுகிறது..
என் மோட்டார் பைக்கின் எண்கள் ஓர் நீங்கா படிமானம்.. வங்கியின் அக்கவுண்ட் நம்பர்., எ.டி.எம் நம்பர், பான்கார்ட் , காஸ் கனெக்ஷன் ... இப்படி பட்டியல்கள் நீளும் ஒவ்வொருவருக்கும்...
ஆனபோதிலும் பைக்கின் நம்பர் ஓர் மந்திரம் போல மனசுள் பதிந்து விடுகிறது.. நம் பைக்கின் எண்கள் கொண்ட பிற வாகனங்களை என்றேனும் அசந்தர்ப்பமாக பார்க்க நேர்கையில் ஓர் மௌனமான மனசிலிர்ப்பு.. அந்த அதே எண்கள் கொண்ட வாகனம் ஓட்டுகிற நபரிடம் ஓடிச்சென்று எனது நம்பரும் இதே என்று சொல்லி விட வேண்டும் போன்ற கற்பனை அவசரம்.. ஆனால் அப்படி கேனத்தனமாக செய்ததில்லை...
யந்திரத்தன்மையுடன் நகர்கிற இந்த வாழ்க்கையில் அவ்வப்போது இம்மாதிரியான அல்ப சந்தோஷங்களை அனுபவிக்கிற ரசனைகள் எத்தனை பேரிடம் உள்ளது என்பது ஓர் கேள்விக்குறி தான்... இரவு வானத்தில் நிலவைக்கூட என்றோ ஒரு நாள் அதிசயமாக பார்த்து, என்னவோ நிலாவையே இவுரு தான் கண்டுபிடித்த மாதிரி கவிதையெல்லாம் வேற எய்துவாக.... அமாவாசை அன்றைக்கு எங்கடா நெலாவக் காணோம்னு வேற பொலம்பி சாகடிப்பாக...

காசு பணம் ஒன்றே குறிக்கோளாக உள்ள எவ்வளவோ பேர்கள், தன வீட்டுக் குழந்தையின் புன்னகையைக்கூட தரிசிக்கப்பிடிக்காத சாபத்தில் உழல்வர்...

சுந்தரவடிவேலு..

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...