இருள் எனக்குள் விளைவித்த விந்தைகள் வெளிச்சங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்ட ஓர் தன்மை... இருள் என்பது சுயம்பு.. அதன் அடர்த்தியையும் அதன் பிரம்மாண்டத்தையும் , எந்த வெளிச்சத்தினாலும் அடக்கவோ நிரப்பவோ சாத்யமில்லை..
எல்லைகளற்று பரவி என்றும் ஓர் நிதர்சனமாய் சத்தியமாய் எங்கெங்கிலும் பரவி வியாபித்துக்கிடக்கிறது இருள்... வெளிச்சங்கள் இயற்கையின் பிரயத்தனங்களிலும் மனிதர்களின் செயற்கை பிரயத்தனங்களிலும் தற்காலிகமாக வந்து போகிற விருந்தாளியே யன்றி .. இருளைப்போன்று என்றென்றும் வீற்றிருப்பதில்லை..
கருமை படர்ந்த இந்த இருட்டு சாம்ராஜ்யத்தில் சூரியன் ஓர் சிறு பொறி... எத்தனை கோடி சூரியன்களையும் சுலபத்தில் கபளீகரம் செய்கிற வல்லன்மை இருட்டொன்றை தவிர வேறெந்த சக்திகளுக்கும் சாத்யமில்லை.
விழிகள் மூடி
நிற்கிறேன்...
இருளை தரிசிக்க.!!
சூரியனை விட
இருட்டுக்கூசுகிறது
எனக்கு..
வெளிச்ச்சத்திருடன்
திறக்கச்சொல்லி
தட்டுகிறான்
என் விழிக்கதவுகளை..
--கதவுகள் திறக்கிறேன்..
அற்ப அற்ப விஷயங்களை
அடையாளம் காண்பித்த
வண்ணம் இருந்தன வெளிச்சங்கள்..!!!
சுந்தரவடிவேலு..
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...
-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
பிச் சை எடுப்பதற்கென்று தகுதிகளாக "ஊனங்கள்" நிர்ணயிக்கப் பட்டுள்ளன.. உழைக்க சோம்பி பிச்சை எடுப்பவன் ஏதேனும் ஒரு கட்டத்தில் தோ...
-
halo vijayshanker, thanks for yr introduction of a blog to me vijay.
No comments:
Post a Comment