கடனை வாங்கும்
போதுள்ள பவ்யம்
மேற்கொண்டு
இருப்பதில்லை
வாங்கியவர்களுக்கு..
கொடுத்தவன்
திரும்பப்பெறுவதற்கு
மேற்கொள்ளப்பட
வேண்டியதாகி விடுகிறது
பவ்யம்...
இருப்பதைப்பிடுங்கும்
ஆற்றல் நம்மை
சுற்றிலும் ஊடுருவிக்
கிடக்கிறது..,
கொடுக்கிற நம்
ஆற்றலைக்கூட
கொச்சைப்படுத்துகிற
பிச்சைக்காரர்கள்...
வழக்கத்துக்கு மாறாக
ரெண்டொரு நாட்கள்
சில்லறை இல்லை
என்று சொல்வதையே
அவநம்பிக்கை பிதுங்கப்
பார்ப்பர்...
சுற்றி இருப்பவர்களினிடத்து
நம்மைக் கேவலப்படுத்துவது
போல செய்வதில் அவர்களுக்கு
ஓர் அலாதி ஆனந்தம்...
இறைஞ்சுதல் என்பதே
ஈனத்தனம்...
கடவுளினிடத்து பக்தன்
இறைஞ்சுவது , கோவிலுக்கு
வெளியே இறைஞ்சுகிற
பிச்சைக்காரனை விட
ஓர் கேவலமான ,
தன்மானம் இழந்த செயல்
என்பேன் நான்...
இருக்கிற நிலைப்பாட்டிற்கு
நன்றி தெரிவிப்பதே
நாகரீகம்...
நல்லது மாத்திரமே
நடக்க வேண்டும் என்று
கெஞ்சுவதும்,
நடக்காமற்போயின்
இறைவனைத்தூற்றுவதும்
மகா அநாகரீகம்..!!
சுந்தரவடிவேலு.. திருப்பூர்/
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...

-
ப வித்ரம் ததும்பிய உமது யெளவனம்.. ப்ராயங்கள் பற்பல கடந்த பிற்பாடும் என் மனம் விட்டகலா தூரிகையாய் வியாபிக்கிறது.. உமது மெருகில...
-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
பிச் சை எடுப்பதற்கென்று தகுதிகளாக "ஊனங்கள்" நிர்ணயிக்கப் பட்டுள்ளன.. உழைக்க சோம்பி பிச்சை எடுப்பவன் ஏதேனும் ஒரு கட்டத்தில் தோ...
சுந்தர வடிவேலு, உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
ReplyDelete