Sunday, March 28, 2010

nyaanangalum icchaigalum.. [FOUR-4]

எதை போகஸ் பண்ணினா சர்குலேஷன் ஜாஸ்தி ஆகும்னு நம்ம தமிழ் பத்திரிகைகளுக்கா தெரியாது..? இப்போதைக்கு நம்ம நித்யானந்தா இருக்கற போது வேற பிரச்சினை எல்லாமே ஜுஜுபி தான்.. ஆ ஊ நா பெட்டிக்கடைகளில் நோட்டீசா தொங்கறது நம்ம நித்தி தான்...

சொல்லப்போனா நக்கீரன் ஜூ வி குமுதம் ரிப்போர்டர் எல்லாமே நித்யாவுக்கு ராயல்டி தொகையே தந்தாகணும்... அவரும் தான் அதுக்கு தகுந்தாற்போல வெடுக்குனு உண்மையை ஒத்துக்கறாரானா அதுவும் இல்லை.. பாலியல் ஆராய்ச்சின்னு ஒரு டுபாக்கூரு நியாயம் அளக்கறாரு... அப்புறம் கட்டாயம் நேர்ல வந்து விளக்கம் அளிப்பாராமா... கிளிண்டனுக்காவது ஒரு ஜோடி ஷூ மாத்திரம் போய் விழுந்துச்சு.. இந்த அன்னாருக்கு பிஞ்ச செருப்புகளே போய் போய் விழும்...
என்னை கேட்டா மெடிக்கல் கான்பரன்ஸ் மாதிரி ஒரு ஓரமா அங்கன இருந்து ஒளிஞ்சுக்குனு பேசினா மச்சான் கொஞ்சம் அடி ஒதைல இருந்து தப்பிப்பார்னு தோணுது.. இந்த டெக்னிக் எல்லாம் நித்யாவுக்கு அத்துபடி.. நாம சொல்லியா தரணும்?

ஆமாய்யா .. பண்ணிட்டேன்.. மேற்கொண்டு இப்பிடி ஆகாம பார்த்துக்கறேன்... மன்னிக்க இஷ்டம் இருந்தா மன்னிச்சுடுங்க, இல்லையா .. என்னை ஆன்மீகத்திலிருந்து தள்ளி வச்சிடுங்க.. ஒரு ஓரமா நான் பாட்டுக்கு இருந்திட்டுப்போறேன்.. " என்று சொல்லித்தொலைந்திருந்தால் கூட கொஞ்சம் யதார்த்தமாக இருந்திருக்கும்... நாயை உட்டுத்தொலைங்கடா என்றாவது மக்கள் ஒதுங்கி இருப்பார்கள்... இப்படி எதுவும் அற்று மறுபடி அதையும் இதையும் பேசி சொதப்பி, இப்ப ஆளாளுக்கு டின்னு கட்ட ரெடியா நிக்கிறாங்க.. எப்பிடி சமாளிப்பியோ நித்யா..
சொல்ல முடியாது.. மறுபடி நீ மக்களை வசியம் பண்ணி அல்வா தந்தாலும் தந்திடுவே.. .. எத்தனை அடிபட்டாலும் இன்னும் நம்ம மக்கள் புதுசு புதுசா பைனான்சு கம்பெனில காசை உட்டுக்கினு அதுக்கான சர்டிபிக்கட்டை வேற டிவி பேட்டியில சிரிச்சுக்கினே காட்டராணுக.. அதே மாதிரி உன் கிட்டயும் மறுபடி வந்து உய்ந்தாலும் சொல்றதுக்கு இல்லே..சும்மா நீ இல்லாத போது உன்னை செப்பல்ல அடிக்கனும்னு குதிப்பான்களே தவிர , நீ எதனாச்சும் ஒரு புது புருடா உட்டீனா உன் பாதத்தையே கழுவிக்கூட குடிப்பாங்க..

சுந்தரவடிவேலு.. திருப்பூர்.

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...