Thursday, February 25, 2010

பிரச்சினைகள்...

பிரச்சினைகளுக்கு முகம் காட்ட மறுக்கிற சுபாவம் உள்ள நபர்கள் அதிகம் உள்ளார்கள்... நானுமே கூட...!!
முளையிலேயே நகத்தில் கிள்ளி எறிந்திருக்க வேண்டிய பிரச்சினைகளை நமது சுபாவமே ஆன தர்மசங்கடம் காரணமாக தவிர்த்திருப்போம்... அது பிற்பாடு நமக்கே புரியாமல் பூதாகரமாக வளர்ந்து நம்மையே கபளீகரம் செய்து விடக்கூடிய விபரீதங்கள் சுலபத்தில் நிகழும்.. ஏது செய்வதென்று தெரியாமல் சுக்கு நூறாகி விடுவோம்...

ஆகவே, தயை கூர்ந்து யாதொரு பிரச்சினைகள் எனிலும், அதற்கு முகங்காட்டி , நம்மைக்கண்டு அந்தப்ப்ரச்சினை தலைதெறிக்க ஓடி விட வேண்டுமேயல்லாது , அவைகளிநிடத்து நாம் சிக்கி சீட்டி அடிக்கக்கூடாது...

பிரச்சினைகள் மெழுகு பொம்மைகள்... நெருப்பென நாம் அவைகளுக்கு முகம் காட்டி உருகி விலகச்செய்திட வேண்டும்..
பாறைகள் என நினைத்து பிரச்சினைகளுக்கு பயந்து ஒதுங்கிநோமேயானால் அவைகள் நம்மை சிதிலமாக்கி சின்னா பின்னமாக்கி விடும்..

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...