கழுத்தில் சுற்றி
சிவனை அழகு
படுத்துகிற பாம்பு
நம்மை ஏன் கொத்திக்
கொல்ல மட்டுமே
வருகிறது?...
முருகனை மட்டுமே
ஏற்றி உலகம் சுற்றுகிற
மயில் .. நாம் வெள்ளாமை
செய்திருக்கிற நெற்பயிர்களை
வந்து ஓயாமல் சேதம் செய்வது ஏன்?
விநாயகர் முன்னிலையில்
லட்டைக் கையில் ஏந்தி
மிகவும் பவ்யமாகக்
காட்சி தருகிற சுண்டெலி
நம் வீட்டுத் தலையணை
போர்வைகளை ரணகளம்
செய்து நம் தூக்கங்களை
அல்லவா துவம்சம்
செய்கின்றன?...!!
யதார்த்த வாழ்விலே
மனிதனுக்கு அவஸ்தை
கொடுக்கிற யாவற்றையும்
தெய்வத்தின் முன்னிலையில்
சாதுவாக நிறுத்துகிற
அவனுடைய கற்பனாரசனை
கவித்துவம் நிரம்பியதே..
--கடவுளையே
அற்புதமாக கற்பனை
செய்கிற மனிதன்
அல்ப மிருகத்தை
செய்ய சிரமப்படுவானா என்ன?
சுந்தரவடிவேலு..
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...

-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
பிச் சை எடுப்பதற்கென்று தகுதிகளாக "ஊனங்கள்" நிர்ணயிக்கப் பட்டுள்ளன.. உழைக்க சோம்பி பிச்சை எடுப்பவன் ஏதேனும் ஒரு கட்டத்தில் தோ...
-
ப வித்ரம் ததும்பிய உமது யெளவனம்.. ப்ராயங்கள் பற்பல கடந்த பிற்பாடும் என் மனம் விட்டகலா தூரிகையாய் வியாபிக்கிறது.. உமது மெருகில...
No comments:
Post a Comment