காதலையே கொச்சைப்படுத்துவது மாதிரியான ஒரு நாளாக உணர முடிகிறது இந்தக் காதலர் தினத்தை. நாசூக்கான மெல்லிய உணர்வது.. மென்மையும் மேன்மையும் பொதிந்த அதனை, காலத்திற்கும் வெளிக்காண்பிக்க வேண்டிய அதனை, ஒரே ஒரு நாளில் அடக்கி அன்று மட்டும் அதற்கு முக்கியத்துவம் தருவதும் அதற்காக காதலர்கள் குதூகலிப்பதும் அப்பட்டமான அல்பத்தனமாக படுகிறது...
காதல் என்பதும் காமம் என்பதும் புனிதமும் ரகசியமும் நிரம்பிய மகோன்னதமான உணர்வுகள்... அதனை சந்தைப்படுத்துவது போன்று நாகரீகமற்று இம்மாதிரியான நாட்களை அனுஷ்டிப்பதெல்லாம் நம் இந்தியக் கலாச்சாரத்திற்கு முரணாயும் முட்டாள்தனமாயும் புரிகிறது...
இதனை வரவேற்பதும் வாழ்த்துக்கள் பரிமாறிக்கொள்வதும் பார்க்கவும் கேட்கவும் கூச்சத்தில் நெளிய வைக்கிறது.. லஜ்ஜை உள்ள எல்லார்க்கும் இவ்விதமாகத்தான் இருக்கும்...
இதனை எதிர்ப்பவர்கள் கூட ஓட்டுப்பொறுக்கிகளும் , வன்முறைகளை வளர்க்க விரும்புகிற அரசியல் கட்சிகளும் தானே தவிர, வேறு உருப்படியான உள்நோக்கம் கொண்டவர்கள் இல்லை என்பது வருந்தத்தக்கதே...
ஓரினச்சேர்க்கையை ஆதரிப்பவர்களுக்கும் இந்தக் காதலர் தினத்தை ஆதரிப்பவர்களுக்கும் அப்படி ஒன்றும் பெரிய வித்யாசம் இருப்பது போல எனக்குப் படவில்லை...
சுந்தரவடிவேலு.. திருப்பூர்..
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...
-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
halo vijayshanker, thanks for yr introduction of a blog to me vijay.
-
பிச் சை எடுப்பதற்கென்று தகுதிகளாக "ஊனங்கள்" நிர்ணயிக்கப் பட்டுள்ளன.. உழைக்க சோம்பி பிச்சை எடுப்பவன் ஏதேனும் ஒரு கட்டத்தில் தோ...
No comments:
Post a Comment