அனாவசியம் என்று
எதனையும் அவ்வளவு
அவசரப்பட்டு அப்புறப்
படுத்த முடிவதில்லை..
மேஜை எங்கிலும்
பரவலாக காகிதங்கள்..,
எடுத்து பத்திரப்படுத்த வேண்டும்
என்பதான அனுமானம்
பத்து நாட்களுக்கும் மேலாக...!
கசக்கி குப்பைக்கூடையில்
போட்ட பிற்பாடே அந்தக்
காகிதம் பிரத்யேகமான
தேடலுக்கு உள்ளாகும்...
-மேஜையின் மீது
நாய் கூட சீந்தாமல்
நாற்பது நாட்கள் கிடக்கும்...!!
நம் வாழ்க்கை கூட
அந்தக்காகிதம் போல தான்...
எந்தப்ப்ரயோஜனமும் அற்று
சும்மாவே கிடப்போம்..,
புதையுண்ட பிறகாக
ஆற்ற வேண்டிய ஆயிரம்
கடமைகள் அநாதைகளாகி
விட்டதாக
நம் ஆன்மா அரற்றும்?....
சுந்தரவடிவேலு
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...
-
ப வித்ரம் ததும்பிய உமது யெளவனம்.. ப்ராயங்கள் பற்பல கடந்த பிற்பாடும் என் மனம் விட்டகலா தூரிகையாய் வியாபிக்கிறது.. உமது மெருகில...
-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
பிச் சை எடுப்பதற்கென்று தகுதிகளாக "ஊனங்கள்" நிர்ணயிக்கப் பட்டுள்ளன.. உழைக்க சோம்பி பிச்சை எடுப்பவன் ஏதேனும் ஒரு கட்டத்தில் தோ...
No comments:
Post a Comment