ஓர் மனிதன் இந்த உலகில் இருந்து ஒன்றை சாதிக்க வேண்டுமேயன்றி, தீயில் கொடுமையாக கருகி தன்னை மாய்த்துக்கொண்டு அவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரியவில்லை எனக்கு... காலம் நமக்கு கொடையாக வழங்கியுள்ள இந்த விலை மதிப்பற்ற உயிரை வைத்துக்கொண்டு இந்த சமுதாயத்தை அற்புதமாக வழிநடத்துகிற திறனை வளர்க்க வேண்டும், நமக்கு இந்த நாட்டின் மீதும் நாட்டு மக்களின் மீதும் உண்மையான அக்கறை இருக்கும் பட்சத்தில்.. அதனை விடுத்து இப்படி தியாகம் என்கிற பெயரில் எல்லாரும் உயிர் நீக்கத்துணிந்தோமானால் அப்புறம் அட்டூழியங்களுக்கு விடிவே பிறக்காது...
இதனை தியாகம் என்று இளம் நெஞ்சங்களில் வீரத்தை விதைப்பதாகக் கருதி நாம் நம்மையும் அறியாமல் ஊக்குவிப்பதைத் தவிர்த்து இந்த உலகில் இருந்து சாதிக்கிற விவேகத்தையும், வீரத்தையும் இனி வருகிற தலைமுறைகளுக்கு புகட்ட வேண்டுமேயன்றி இந்தத்தற்கொலையை விடுதலை தாகமென்றும் வீர மரணமென்றும் தவறுதலாக அடையாளப்படுத்தி மீண்டும் ஒரு முறை இவ்வித விபரீதத்தை நடைபெறாமல் இருக்க செய்வதே நாம் இந்த நாட்டிற்கு ஆற்ற வேண்டிய தலையாய கடமை தியாகம் பகுத்தறிவு எல்லாமும் ஆகும்....
நன்றி.. ஜெய் ஹிந்த்..
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...
-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
halo vijayshanker, thanks for yr introduction of a blog to me vijay.
-
பிச் சை எடுப்பதற்கென்று தகுதிகளாக "ஊனங்கள்" நிர்ணயிக்கப் பட்டுள்ளன.. உழைக்க சோம்பி பிச்சை எடுப்பவன் ஏதேனும் ஒரு கட்டத்தில் தோ...
No comments:
Post a Comment