உன்னை
வசீகரிப்பதற்கான என்
எல்லா பிரயத்தனங்களும்
தழுவிய தோல்விகள்----
--ஓர் இனம் புரியாத
அனுபவமுதிர்ச்சியை
என்னில் ஊடுருவச்செய்துள்ளது...!
மேற்கொண்டு
என்ன செய்வது என்கிற
புதிய சிந்தனை ஓட்டங்களையும்
கழிகிற நேரங்களை
சுவாரஸ்யமாகவும்
மாற்றியமைத்த பேறு
உன்னையே சேரும்...
என் காதல்
மிகவும் ரசனை நிரம்பியதென்றும்
வண்ண மயமானதென்றும்
வர்ணித்த நீயே தான்
---- அந்த என் அன்புக்காதலி
நீ என்று நான் சொன்னதும்
பார்வைத்தீயில் என்னை
சுட்டுப்பொசுக்கினாய்...
ஆக --
பிறரையும் பிறவற்றையும்
நான் ரசிக்கையில்
மிகுந்த வாஞ்சையோடு
அங்கீகரிக்கிற நீ
உன்னை ரசிக்கிறேன்
என்கிற போது மட்டும்
தடுமாற்றமடைவதும்
என்னைத் தவிர்க்க
முயல்வதும் ..
அப்படி என்ன
உன்னைக்குறித்த
என் ரசனைகள்
உனக்கு அசுவாரசியமாகி
விட்டதென்கிற பெரிய
கேள்வி என்னிடம்
இருக்கிறது என்றாலும்....
--உன் இந்தத்தன்மை
உன்னை எனக்கோர்
சுயநலமியாக அடையாளம்
காண்பிக்கத்துவங்கியுள்ளது
சமீப நாட்களாக...
சொல்வதற்கில்லை...
என்னையும் என் காதலையும்
நீ ஏற்கிற ஓர் தருவாய்
வரும் பட்சத்தில்
உன்னை நான்
தவிர்த்து விடக்கூடுமோ
என்று கூட அஞ்சுகிறேன்...!![???]
சுந்தரவடிவேலு...
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...
-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
பிச் சை எடுப்பதற்கென்று தகுதிகளாக "ஊனங்கள்" நிர்ணயிக்கப் பட்டுள்ளன.. உழைக்க சோம்பி பிச்சை எடுப்பவன் ஏதேனும் ஒரு கட்டத்தில் தோ...
-
halo vijayshanker, thanks for yr introduction of a blog to me vijay.
No comments:
Post a Comment