என் முரண்கள்
எனக்கே சங்கடம்
அளிப்பவை...!
-வாயில் பீடியை
ஊதிக்கொண்டே
புகை பிடிக்காதீர்கள்
விளம்பரப்பலகை
எழுதிக்கொண்டிருப்பது
போல...
கும்பாபிஷேக
நெரிசலில்
மறந்து போகிற
தெய்வ பக்தி..
பெண்கள் மார்பகங்களில்
ஒன்றிப்போகிற மனசு..!!
மாய்ந்து மாய்ந்து
படித்து விட்டு
பரீட்சை நாளில்
புது ரிலீஸ் பட
தியட்டரில் வரிசையில்
நின்று கொண்டிருப்பது...
இழவு வீட்டில் போய்
இனிப்புப் பலகாரம்
கேட்டது போலிருக்கிறது
எனக்கிந்த வாழ்க்கை..!!
சுந்தரவடிவேலு..
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...

-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
ப வித்ரம் ததும்பிய உமது யெளவனம்.. ப்ராயங்கள் பற்பல கடந்த பிற்பாடும் என் மனம் விட்டகலா தூரிகையாய் வியாபிக்கிறது.. உமது மெருகில...
-
பிச் சை எடுப்பதற்கென்று தகுதிகளாக "ஊனங்கள்" நிர்ணயிக்கப் பட்டுள்ளன.. உழைக்க சோம்பி பிச்சை எடுப்பவன் ஏதேனும் ஒரு கட்டத்தில் தோ...
ம்.ம்..
ReplyDeleteகவிதை நல்லாயிருக்கு
பகிர்ந்தமைக்கு நன்றி