குருட்டாம்போக்கில் மூன்று ப்லோகுகள் திறந்து விட்டேன். உருப்படியாக ஒரு ப்ளோகில் எழுதிக்கிழிப்பதே பெரும்பாடாக இருக்கையில் மூன்று எதற்கு என்று மீதி இரண்டை பஸ்பமாக்கிவிட்டேன்.. ஆனாலும் ஒரு சபலம்.. ஒரு ப்லோகை நமது நாலாந்தர சிந்தனைகளை வெளியிட வைத்துக்கொண்டால் என்ன என்று.
இமேஜ் ஸ்பாயில் என்று ஒரு நெருடல் இருந்தாலும் அப்படி ஸ்பாயில் ஆகும் அளவு நம்மிடம் என்ன இமேஜ் வாழுகிறது என்று ஒரு நக்கலும் தோன்றியது..
சரி.. அப்படி நமது அவ்வித அல்ப சிந்தனைகளையும் ஒரே ப்ளாகில் வெளியிட்டால் போகிறது.. யார் என்ன சொல்லப்போகிறார்கள், என்கிற நியாயமான ஓர் கோட்பாட்டின் அடிப்படையில் என் இதர இரண்டு ப்லாகுகளையும் வெட்டிவிட்டேன்.
ஆகவே மக்களே, இந்த ஒரே பிளாகில் தான் என் பயணம் இனி. தொடர்ந்து தங்கள் ஆதரவுகளை எனக்கு நல்குமாறு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்....
"யாருடா இந்த டுபாக்கூரு.. போட்டுச்சாத்துங்கடா"....
என்கிற உங்கள் கூக்குரல்களை , அசரீரிகளை இந்த காதுகள் நன்கு கேட்கிறது நண்பர்களே...
sundaravadivelu
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...

-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
ப வித்ரம் ததும்பிய உமது யெளவனம்.. ப்ராயங்கள் பற்பல கடந்த பிற்பாடும் என் மனம் விட்டகலா தூரிகையாய் வியாபிக்கிறது.. உமது மெருகில...
-
பிச் சை எடுப்பதற்கென்று தகுதிகளாக "ஊனங்கள்" நிர்ணயிக்கப் பட்டுள்ளன.. உழைக்க சோம்பி பிச்சை எடுப்பவன் ஏதேனும் ஒரு கட்டத்தில் தோ...
No comments:
Post a Comment