ஹைத்தி தீவில் நடந்த மிக மோசமான பூகம்பம் நம் மனசுகளையும் உலுக்கியது என்றால் மிகையன்று..
தீவெங்கும் பிணங்கள் படர்ந்து கிடக்கிறது... பெரிதாக புதைகுழிகள் தோண்டப்பட்டு , அதே புல்டோசர் அந்தப்பிணக்குவியல்களையும் கொத்தாக அள்ளி அள்ளி அந்தக்குழிக்குள் போடப்படுகிறது.., சில பிணங்கள் தாறுமாறாக குழிக்குள் விழாமல் மேற்பகுதியிலேயே விழ, மறுபடி அதனை அந்த புல்டோசரின் கை தூக்கி குழிக்குள் வீசுகிறது..!!
இல்லை என்றால் அழுகி நாறி நோய்களைப்பரப்பக்கூடும்...
--அய்யஹோ.. மனித உயிர்களை இயற்கை எவ்வளவு துச்சமாக மதித்து விட்டது???
மாண்டவர்கள் கூட கொடுத்து வைத்தவர்கள்.., மீண்டவர்களோ... அதுவும் அவயவங்களை இழந்து, உறவுகளை இழந்து... காதலன் காதலியை இழந்து, காதலி காதலனை இழந்து... அந்த மன ; உடல் வேதனைகளை சுமந்து மேற்கொண்டும் அந்தத்தீவில் வாழ்க்கையை மறுபடி வாழத்துவங்க வேண்டிய சூழ்நிலையில் இருப்பவர்களுக்கு... அதை விட வேறொரு நரகம் அவர்களுக்கு எங்கும் இல்லை என்றே தோன்றுகிறது...
பொருளுதவிகளும் ஆதரவு வார்த்தைகளும் மாத்திரமுமே நம்மால் அவர்களுக்கு விநியோகிக்க முடியும்...
தெறித்து விழுந்து விடுமோ என்கிற அளவுக்கு நெஞ்சு பதறுகிறது..,
எல்லா காயங்களையும் காலம் ஆற்றும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.. ஆனால் இந்தக்கோர தாண்டவத்தில் காலமே கதிகலங்கிப்போயிருக்கக்கூடும்...
சுந்தரவடிவேலு..
மனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு ..! ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..!! -மகாத்மா காந்தியடிகள்
Friday, January 15, 2010
Subscribe to:
Post Comments (Atom)
நிகர் ...
உந் தன் நிமித்தம் "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...
-
ஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: "நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...
-
பிச் சை எடுப்பதற்கென்று தகுதிகளாக "ஊனங்கள்" நிர்ணயிக்கப் பட்டுள்ளன.. உழைக்க சோம்பி பிச்சை எடுப்பவன் ஏதேனும் ஒரு கட்டத்தில் தோ...
-
halo vijayshanker, thanks for yr introduction of a blog to me vijay.
No comments:
Post a Comment