Tuesday, January 19, 2010

மயிலிறகு..

காதல் என்ற
மயிலிறகு வருடல்
வாழ்வு நெடுக
எத்தனை பேர்க்கு
வாய்க்கும்?
--நெடுக வேண்டாம்..,
ரெண்டொரு வருடங்கள்..?
அந்தக்கொடுப்பினை
கூட அற்று வெறுமனே
நகர்கிற கொடுமை,
பிறப்புக்கே இழுக்கென்று
அபிப்ராயிக்கத்தோன்றுகிறது...

குறைந்த பட்சம்
ஒருதலைக்காதலிலாவது
பொழுதுகள் கழிந்திருக்குமாயின்
அது கூட வாழ்க்கையை
சற்று நிரப்பி விட்ட மாயை...

மயிலிறகாக உணராமல்
மயிராக உணர்ந்து எவ்வளவோ
காதல்கள் செய்யப்படுகின்றன.,
--பின்னொரு நாளில் கொச்சை
படுத்தப்பட்டு , காதல் என்பதற்கான
தாத்பர்யமே சீரிழந்து ...
ஆனால் அப்படி இங்கிதமில்லாத-
வர்களுக்கெல்லாம் காதல்
துவக்கத்தில் சுலபத்தில்
சாத்யப்பட்டு விடுகிற
விபரீதம் ..

எவ்வளவோ மயிலிறகுக்காதல்கள்
ஒருதலைப்பட்சமாக மட்டுமே
ஏங்கி சாகடிக்க வைத்து விட்டு
நடை பிணமாக்குகிற
அவலங்கள் யாவும்....
--- காதலே அற்று வாழ்ந்து
சாவதை விட மேன்மையானதென்றே
அடித்துக்கூற முடியும்
காதல் உணர்ந்த எல்லாராலும்...!!


சுந்தரவடிவேலு

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...