
சிறகுகள் பிய்ந்து
உதிர்ந்து சீக்கிரமே
காணாமல் போனாலும்
நான் ஏன்
பட்டாம் பூச்சியாகப்
பிறக்காமல் போனேன்
என்கிற வருத்தம்
தவிர்க்க முடியவில்லை..
இந்த ஆறாம்
அறிவுள்ள மனித
உடல் தவிர்த்து
பிற எந்த உடலாயினும்
அதனில் தரித்து
இந்தப் பிரபஞ்சத்தை
தரிசித்திருக்கலாம்
என்கிற அங்கலாய்ப்புக்கு
அருகதையாகிறது
இந்த மனிதப் பிறப்பு..
வசந்த அனுபவங்களும்
கசந்த அனுபவங்களும்
வாழ்நாள் நெடுக
இழைந்தவாறே
பீடுநடை போடுகின்றன
நம்மோடு என்றாலும்--
மாற்றுப் பிறப்புக்கு
ஏங்குகிற சுகத்துக்காகவே
பார்க்கலாம்
பட்டாம்பூச்சி உட்பட...!!
No comments:
Post a Comment