Friday, February 20, 2015

கழியாத பழையன ..

னது முகம் 
கூட எனக்கு 
தெளிவான ஞாபகத்தில் 
இல்லை.. 

ஆனால் உன்னைக் 
குறித்தான ஏக்கம் 
அதே அடர்த்தியில் 
இன்னும் என்னில்.. 

மறுபடி உன்னை 
எங்கேனும் நான் 
பார்க்கும் பேறு கிட்டுமோ 
என்கிற தேடல் உண்டு 
என்னிடம்.. !

சாலைகளில் 
எதிர்ப்படுகிற சில 
பெண்களின் முகங்கள் 
உனது முகம் 
ஒத்தவையாக  உள்ளன..
அப்போது மட்டும் 
உன் முகம் உடனே 
எனது இதயத்தைப் 
பிய்த்தெறிந்து வெளிவருகிறது.. 

உன்னை அன்று 
பின்தொடர்ந்தது போன்று  
உன் மாதிரி பெண்களையும் 
இன்று பின்தொடர  நேர்கிறது.. 

அவை 
மலரும் நினைவுகளுக்காக 
மட்டுமே அன்றி வேறெதற்கும் 
அன்று.. !!

எனது சூழல் புரியாத  
அவர்கள்  என்னை 
ஒரு களவாணி போன்று  
கருதி  துரிதமாகிறார்கள் ..

எனக்கது வேதனையளிக்கிறது..
நீயே அவ்விதம் 
புறக்கணிப்பது போன்று  
அழுகை முட்டுகிறது.. !!

2 comments:

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...