Wednesday, February 18, 2015

ராமராஜனும் ரஜினிகாந்தும் ..

மாநில முதலமைச்சராக நாற்காலியில் உட்காருகையில் தமிழக மக்களுக்கு என்னென்ன செய்து சாதிக்கலாம் என்கிற நீண்ட பட்டியல் நிச்சயம் ராமராஜன் வசம் இருந்திருக்கக் கூடும்.. கரகாட்டக்காரன் பட்டிதொட்டி எல்லாம் பட்டையைக் கிளப்பிய அந்தக் காலகட்டங்களில்..
ஆனால் காலமோ மக்களோ அதற்கொரு சாசுவதத்தை அவருக்கு அளிக்கவில்லை.. அடுத்த MGR கனவுகளில் ராமராஜன் மிதந்து கொண்டிருந்தார்.. ஆனால் அடுத்து அடுத்து வந்த படங்கள் ரா.ரா வுக்கு பெரும் ஆப்புகளாக அமைந்தன.. தங்கக் கனவுகள் துகள்களாகிப் பறந்தன.
இப்போது அந்தத் துகள்களும் வெறும் தூசிகளாகி... மூக்கிலேறி 'அண்ணன்' தும்மிக் கொண்டிருக்கிறார்.......Image result for ramarajan and rajinikanthImage result for ramarajan and rajinikanth

டத்துக்கு படம் 'பஞ்ச்' டயலாக் பேசி ரசிகர்களை, பிற மக்களை இம்சித்து வந்த நம்ம ரஜினிக்கு இப்ப டோட்டலாவே ஆப்பு என்பது போல தான் அவரும் உணர்கிறார், மக்களும் உணர்கின்றனர்..
தன்னோட கடைசிப் படமா எந்திரனை அறிவிச்சு அழகா ஒரு மெகா ஹிட் கொடுத்த திருப்தியோட தன்னோட திரை உலக வாழ்வில் இருந்து விலகி, அரசியலில் தடம் பதித்திருந்தால் ரஜினியின் தீர்க்க தரிசனத்தை மெச்சலாம்.. ஆனா பாருங்க.. 3 ன்னு ஒரு 3 பட்டை நாமம் சார்த்துன மாதிரி ஒரு படத்தை மகளும் மருமகனும் சேர்ந்து ஒரு வழி செஞ்சாங்க.. அதுக்குப் பிறகு இன்னொரு மகள் தன்னோட பங்குக்கு கோச்சடையான் ன்னு ஒரு அனிமேஷன் படத்தை  எடுத்து கவுத்தாக.. இதெல்லாம் போதாதுன்னு ரஜினி  தன்னோட பங்குக்கு லிங்கா ன்னு ஒரு படத்துல நடிச்சு ... அது என்ன ஆச்சு ... இப்ப என்ன ஸ்டேட்டஸ் அப்டிங்கறதெல்லாம் உங்க எல்லாருக்கும் புரிஞ்ச விஷயம்..
இப்போதைய கண்டிஷன் என்னன்னா, ரஜினியோட சினிமா வாழ்க்கையும் கேள்விக்குறி. அரசியல் வாழ்க்கையும் கே.கு.. 

1 comment:

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...