Tuesday, February 10, 2015

சம்பந்தமில்லாதவர்கள்..

தாயினிடத்து 
சிப்பிக்குள் முத்து போல 
ஆரோக்கியமாக 
பத்திரப் பட்டுக் கிடந்தோம்.. 

வெளி வந்த 

சில வருடங்களில்.. 

நோயெனும் 

தீவிரவாதியிடம் 
சிக்கிய பிணைக் கைதிகளாக 
மாறின நம் உடல்கள்.. !!

அல் -கொய்தா போன்ற 

ஆஸ்பத்திரிகளும் 
ஒசாமா பின்லேடன் போன்ற 
டாக்டர்களும் 
நோய்களின் தோழர்களே அன்றி 
ஆரோக்கியத்தின் பாதுகாவலர்களா 
என்ன??

வலி நிரம்பிய வாழ்க்கைகள் 

கைநழுவப் பார்த்தாலும் 
இறுகப் பற்றி வாழ முனைபவர்கள்
மனிதர்கள்..  
வலியற்ற மரணங்கள் 
ஆலிங்கணம் செய்ய வந்தாலும் 
புறந்தள்ளும் அவசரகதியில் தான் 
நம் அனிச்சை செயல்கள் அனைத்தும்....!!

குண்டுவைத்துத் தகர்க்கிற  

துர்க்குணம் நிரம்பியவன் 
கால்களைப் பற்றியேனும்  
வாழ்ந்து விடுமளவுக்கு 
இந்த வாழ்க்கை சுவாரஸ்யப் 
பட்டுப் போகிறது எல்லாருக்கும்.. 

நித்தரையினூடே இழைய வருகிற 

இயல்பான மரணத்தைக் கூட  
உடனடியாக அடையாளம் கண்டுணர்ந்து 
துப்புரவாக்கும் துரிதம் நம்மில்.. 

ஆனால் எவ்வித ஆர்ப்பாட்டங்களும் 

அற்று நம்மை அள்ளிப் போட்டுக் 
கொண்டு போய்  விடும் ஒரு எதிர்பாரா 
தருவாயில் மரணம்... 

"இஸ்மாயிலுக்குத்  தர வேண்டிய 
ஐம்பதாயிரம் ஆகட்டும் 
ஆறுமுகம் நமக்குத் தரவேண்டிய 
அறுபதாயிரம் ஆகட்டும் 
ஜோசப் மனைவி இசபெல்லா 
அடகுக்கு வைத்திருந்த 
தோடாகட்டும்  "
மேற்கொண்டு 
எந்தக் கணக்கு வழக்குகளும் 
செத்தவனுக்கு இனி சம்பந்தமில்லை.. !!



2 comments:

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...