Wednesday, May 30, 2012

நமது அவஸ்தை மதிக்கப்படுமா??

இந்த atm கார்டுகள் மனிதனை அவ்வப்போது படுகுழியில் தள்ளி மூர்ச்சை ஆக்கி சின்னாபின்னம் செய்து விடுகின்றன... 
சமீபத்தில் ஓர் பத்தாயிரம் ரூபாய் பணம் எடுத்த மாதிரி காண்பிக்கிறது mini  statement .. ஆனால் என் கைக்குப் பணம் வந்த பாடில்லை... எனது அக்கவுன்ட் உள்ள வங்கியை அணுகிநாலோ, அதற்கொரு புகார் மனு அளிக்க சொல்லி, அதன்படி எழுதித் தந்து ரெண்டு வாரங்களுக்கு மேல் ஆயிற்று... 
அய்யஹோ .. அது குழந்தையை எல் கே ஜி சேர்ப்பிக்க தேவையான தொகை..இப்படி மாட்டிக்கொண்டதே என்று புலம்பிக் கூட அதற்குரிய துரித நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டு வைத்த சமாசாரம் மறுபடி இன்றைக்கு என்னாயிற்று என்று விசாரிக்க சென்ற
போது 

  தான் புரிந்தது..
தாட் பூட் என்று கத்திதொலைந்தாலும் பிரயோஜனப் படாது என்று மறுபடி மூஞ்சியை பவ்யமாகவே வைத்துக் கொண்டு ஏன் சார் இவ்வளவு லேட்? என்று தான் முணக வேண்டியாயிற்று..
இன்னும் ரெண்டொரு நாளில் சரி செய்து பணம் எடுக்க ஏற்பாடு செய்கிறோம் என்று வாக்குறுதி தந்தார்கள்.. ஆனால் நம்முடைய அவசரமோ பதற்றமோ கிஞ்சிற்றும் அவர்களை பாதிக்கவில்லை என்பது கண்கூடு... state bank of travancore tiruppur main branch இல் தான் எனது சேமிப்புக் கணக்கு... அங்கே தான் இத்தனை குளறுபடி... ஏற்கனவே இவ்விதம் ஓர் ரெண்டாயிரத்துக்கு பிரச்சினையாகி ..
இதனை எல்லாம் நான் ஏன் மெனக்கெட்டு சொல்கிறேன் என்றால் , இவ்விதம் எல்லாருக்குமே நடக்கும் சாத்யக் கூறுகள் உள்ளன.... அவசரத் தேவைகளுக்கு உதவும் படியும் உடனே எவரிடம் விண்ணப்பிப்பது?.. நிலவரத்தை சொன்னால் தான் நம்புவார்களா?.. 
இதற்கெல்லாம் தீர்வு என்ன? யாரிடம் இவர்களது மெத்தனத்தை நாம் புலம்பித் தீர்ப்பது... ஒன்றும் விளங்கவில்லை.. இதனைப் படிக்கிற எவரேனும் consumer court சார்ந்த விஷயங்கள் தெரியுமானால் எனக்கு தெரிவிப்பீர்களாக.. அங்கே புகார் கொடுத்தால் அது செல்லுபடியாகுமா.. நமது அவஸ்தை மதிக்கப்படுமா??
தயை கூர்ந்து இவை குறித்து அறிந்தவர்கள் தெரியப் படுத்தவும்... நன்றி..

2 comments:

  1. hi...i am a banker,.. first answer these two questions..
    wch atm did u use?? same bank or other bank??
    when did u try to withdraw money and whn did u filed complaint??
    i ll try to help you as far as i can
    nkiruthiga88@gmail.com

    ReplyDelete
  2. thanks for you krithikaa. just today they conveyed me that amount again credited in my account.. sure i will complain with u next time , because sure it will happen next time too..I HAD SEND U A MAIL TOO. THANKS.

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...