Monday, May 21, 2012

CELLPHONE CULTURE..


மொபைல் போன் கலாச்சாரம் என்பது பனை போல வளர்ந்து நிற்கிற அனாச்சாரம்... எவராலும் இனி வெட்டி வீழ்த்த முடியாத இந்த நெடுமரம் இனி, மேலும் மேலும் பல்கிப் பெருகி நமது வாழ்க்கைக்குள் ஊடுருவி நம்முடைய இயல்பை, நம்முடைய நிம்மதிகளை களவாடி சென்று விட்டன..
எங்கெங்கு காணினும் செல்லோ செல்... கோவில் வாசலில் பிச்சை எடுக்கிறவன் தனது அன்றைய வசூல் நிலவரத்தை மற்றொரு பெக்கரிடம் விலாவாரியாக விளாசிக் கொண்டிருக்கிறான்... கான்பெரன்சு கூடப் போட்டிருப்பானோ அந்தக் கடவுளுக்கே வெளிச்சம்...
டூ வீலரில் பறக்கிற மைனர்களும் சரி, பொட்டச்சிகளும் சரி, முகங்களைக் கோணலாகத் திருப்பி காதும் தோளும் உரசவே பேசிக்கொண்டு போவதைப் பார்க்கையில் கடுப்பு ஒருபுறம் இருந்தாலும் ஒருபுறம் ஆச்சர்யம் இல்லாமல் இல்லை..எப்டி இப்டி டேலண்டா பேசிக்கினே, வண்டியை ஓட்டிக்கினே போறாங்கோ?.. நாமெல்லாம் வண்டியில போகப் போக செல் வந்ததுன்னா ஒரு ஓரமா ஒதுங்கி நின்னு செல் எடுக்கறதுக்குள்ளே நமக்கு வந்த கால் மிஸ்ட் கால் ஆயிடுது.. மறுபடி நாம டயல் பண்ண வேண்டியதா போயிடுது... சமயங்களில் அடிக்கிற செல்லை பாக்கேட்டிலிருந்து எடுக்கறதே சிரமமா போயிடுது... அப்டி கஷ்டப்பட்டு எடுத்துப் பேசினமுன்னா, எதிர் முனையில பொண்டாட்டி, "வீட்டுக்கு வரச்சே புளி வரமிளகா வாங்கிட்டு வரணும்" நு சொல்வா..

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...