Sunday, May 6, 2012

ஆரோக்கியமானவர்களின் வியாதி..


நோய் குறித்து 
விசாரிப்பவர்கள்
அதற்கான செலவுகளையும்
விசாரிக்கிறார்கள்...
எனக்குத் தெரியும்..
நோய்கள் குறித்தும்
அவர்களுக்கு அக்கறையில்லை..
அதற்கான செலவுகள் குறித்தும்..!!

செலவு இத்தனை லட்சம்
என்கிற போதான 
அவர்களது ரகசிய மலர்ச்சி
எத்தனை நோயாளிகளுக்குப்
புரிபடுமோ தெரியவில்லை..
"--பிரச்சினையில்லை..
செலவுக்கான காப்பீட்டுத்
தொகை வந்துவிடும்"
என்கையில் ..
நோயாளியின் வியாக்யானம்
குறித்து ஓர் ஆற்றாமையை
பார்க்கலாம் அவர்கள் முகங்களில்...

 " "நோய்வாய்ப் படவேண்டும்..
செலவாகவேண்டும்..
அதற்கென பிரத்யேகமாக
கடன்பட வேண்டும்...
முக்கியமாக 
இன்சூரன்ஸ் பாலிசி
எதுவும் எடுக்காமலிருக்கவேண்டும்.." "

--அநேகமாக
இப்படி யோசிப்பவர்கள்
எல்லாம் 
முன்னர் இவனிடம்
கடன் கேட்டுப் 
பெறமுடியாதவர்களாகவே
இருக்கக் கூடும்...!!         


சுந்தரவடிவேலு....

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...