Monday, May 14, 2012

வழக்கு எண் 18\9 பட விமரிசனம்....

வழக்கு எண் 18\9 பார்த்தேன்... விகடனில் ஐம்பத்தஞ்சு மார்க் போட்டிருக்கிறார்கள் என்கிற வெறியில் போய் பார்த்தேன்... தமிழ் சினிமா என்கிற வழக்கமான பார்முலாவை தூக்கி எறிந்து விட்டு ஓர் டாகுமெண்டரி போல எடுத்திருக்கிறார்கள்... 
இவ்வளவு எளிமையான சூழ்நிலைகளை வைத்துக் கொண்டு மிக ஸ்டைல் ஆக திரைக்கதை அமைத்த விதம் அருமை... ஒரு பாட்டிற்கு வெளிநாடு இல்லை என்பதோடு, பாட்டே இல்லை... இசை அற்று அவ்வப்போது ஒலிக்கிற ஒரே பாடலும் மனசை போட்டு பிசைகிறது... 
லிங்குசாமி தனக்கென்று போட்டுக் கொள்கையில் மசாலா டீ போட்டுக் கொள்கிறார்.. யாரையாவது விட்டுப் போடுகையில் மூலிகை கலந்த
பத்தியக் காபி போட வைக்கிறார்??அவ்வபோது சினுங்குகிற இசை அந்த சூழலுக்கேற்றதாகத் தான் உள்ளது... காரெக்டர்களின் இயல்பும் அனிச்சை போன்ற நடிப்பும் ஆச்சர்யமூட்டுகிறது... 
ஆபாசங்கள் எதுவும் திணிக்காமல் அருவருப்பான வசனங்களை உதிர்க்காமல் .. வெள்ளந்திகளாகவே எல்லாரும் உலா வருவது ஆரோக்கியமாக இருக்கிறது... 
இந்த மாதிரி சினிமாக்களுக்கு மக்கள் பக்குவப் படவேண்டும்... அப்போது தான் மறுபடி மறுபடி நல்ல படங்கள்  வரக் கூடும்.. திறமை மட்டுமே ஹீரோ வாக இருக்கும்... 
ஆனால் நம்மவர்கள் சினிமாவை சினிமாவாக மட்டுமே பார்க்க விரும்புகிறவர்கள்... சினிமாவில் உண்மைகளையும் யதார்த்தங்களையும் தரிசிப்பதில் சலிப்புக் காண்கிறவர்கள்...
இந்த ஈனத் தன்மைகளை மாற்றி மக்கள் ரசனைக்குப் புத்துயிர் தருவதில் பெரும் பங்குள்ளவர்கள் இன்றைய சினிமாவை சிருஷ்டிப்பவர்கள்.... பாலாஜி சக்திவேல் போன்றவர்கள் பெருக வேண்டும்... 

நன்றி
சுந்தரவடிவேலு..           

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...