Friday, June 8, 2012

அப்பா

அப்பா இறந்து பதினெட்டு ஆண்டுகள் ஆகின்றன என்ற போதிலும் , அவருடைய புகைப் படத்திற்கு என்றேனும் மாலை அணிவிக்க நேர்கையில் ....கண்களில் ஓர் கசிவையும் மனசுள் ஓர் ஏக்க ஊற்று சுரப்பதையும் உணர முடியும்...
அவர் இருந்த போதிலான ஞாபக அலைகள் .. அந்தப் புகைப் படத்தின் தத்ரூபமான புன்னகை, அதைப் பார்க்கிற ஒவ்வொரு தருவாயிலும் நேரில் மறுபடி அவர் வந்து விட்ட ஓர் மாயையை நிகழ்த்திக் கொண்டே இருக்கும்...

மரணம் என்ன தான் இயல்பான மிகவும் இயற்கையான நிகழ்வென்ற போதிலும் அதென்னவோ தவிர்த்தே தீர வேண்டிய கட்டாயப் பட்டியலுக்குள் வந்து விடுவது வினோதமான ஓர் தன்மை..

நம்முடைய பட்டியல் எவ்வளவு பலவீனமானது என்பது அதைப் போடும் போதே நமக்கு சுலபத்தில் புரிந்தும் விடுகிறது...
காலம் நமக்களிக்கிற அந்த சாபப் பரிசை ஏற்றே ஆகவேண்டிய தருணம் எல்லாருக்குமான அனுபவம்..

சாவதற்கு நியாயமே இல்லை என்கிற கூற்றனைத்தும் நம்முடையதே தவிர காலத்தின் கூற்றுக்கு அடிபணிய வேண்டிய மிக சாதாரண மனிதர்கள் நாம்...
காலம் போடுகிற பட்டியல் அரங்கேறி விடுகையில், நாம் வெறும் ஆசுபத்திரி பில்லை மட்டுமே செட்டில் செய்ய வேண்டி  ஆகிவிடுகிறது..

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...