Sunday, June 10, 2012

ஆண்மை என்கிற பொய்மை

என் கோபங்களும்
வெறுப்புக்களும்
ஓர் இழையில்
எனக்குள் தாங்கொணா
குற்ற உணர்வை
நிகழ்த்துகிற
வல்லன்மை கொண்டவை..

ஆனால் அவைகள்
அரங்கேறுகையில்
நம் வீரமும் ஆண்மையும்
செவ்வனே செயல்படுவதாக
ஓர் தினவு...
--அவ்விதம் நடவாமல்
அமைதி காப்பது
"பொட்டத்தனம் "
என்கிற அனுமானம்..

ஒவ்வொரு
கோபத் தருவாயும்
இப்படியே தான்
கடக்கின்றன...

கோபங்களும்
தவிர்க்கப்படும் போல
தெரியவில்லை..
கூடவே
குற்ற உணர்வுகளும் ...!!


சுந்தரவடிவேலு..

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...