Monday, June 11, 2012

காதலிப்பவர்களின் நாகரீகம்..!!

பேருந்து நிறுத்தத்தில்
உன்னோடு இருப்பது
எனது காதலுக்குக்
கிடைத்திருக்கிற
மகோன்னத
வாய்ப்பென்பேன்...

அனர்த்தமாகவேனும்
எதையேனும் உன்னோடு
பேசுகிற அற்புத
சந்தர்ப்பம் அது...

மற்றவர்கள் எல்லாம்
பேருந்து வரவேண்டும்
என்று காத்திருக்க --
நானும் நீயும்
வந்த பேருந்தை
தவற விட்டுக்
காத்திருக்கிறோம்...

காதலித்த ஆரம்ப
வெட்க நாட்களில்
உமது துரிதம் மற்றும்
பதட்டம் எனக்குள்
இம்ஸை ..

இன்றைய உமது
சாவகாசம்
என்னுடைய
அவசரங்களைக்
கூட நான்
அவமதிக்க வேண்டியுள்ளது..

இங்கே சில
அவஸ்தைகள்
இல்லாமல் இல்லை..
தெரு நாய்கள்
கூச்சலிட்டவாறு
புணர்கின்றன...
சில்லறை இல்லை
என்றாலும் விடாப்பிடியாக
பிச்சைக் காரன்
நச்சரிக்கிறான்...
--நமது பொருத்தம்
குறித்த சிலரது
இங்கிதமற்ற
அப்பட்ட விமரிசனங்கள்..

இவைகளை எல்லாம்
தவிர்த்தோ ..
தவிர்ப்பது போல
நடித்தோ
நாமும் என்னென்னவோ
பகிர்ந்து கொண்டு தான்
இருக்கிறோம்...
--இது தான்
காதலிப்பவர்களின்
நாகரீகம்..!!

சுந்தரவடிவேலு..

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...