Saturday, February 27, 2016

மாயைகள்..

நாம் விரும்பி லயிக்கிற ஒன்றில் நிபுணத்துவம் பெற வேண்டுமென்கிற அதீத அவா மனசுள் பூத்தெழுந்து புத்துணர்வு நல்கி புளக்கிக்கச் செய்கிற இந்த மாதிரியான அனுபவங்கள் அரதப் பழையன . !
என்றாலுமே கூட ஒவ்வொரு முறை அவ்வித ஆவல் மனசுள் மிளிர்கையில், அந்த உணர்வே என்னவோ புத்தம்புதிது போன்று  நம்முள் கிளர்ந்தெழப் பெற்று ஒருவித வார்த்தை பிடிபடாமல் நழுவி விடுகிற அலாதி உணர்வாக வியாபிக்கக் கூடும்..

.. ஜாஸ் இசையில் லயிக்க நேர்கையில் எல்லாம் இப்படி லாவகமாக சாதுர்யமாக இந்த கித்தார் கருவியை நாமும் கற்று இதே அசத்தலோடு பிய்த்து உதற வேண்டுமென்கிற தீட்சண்யம் மேலோங்கி நெருப்பு போன்று ஜ்வாலை பரப்பி என்னுள் ஓர் சுகந்த இம்சையை நிரப்பும்.. 
அதே துரிதத்தில் திரும்பவும் மறைந்து பிற மாற்றுத் திறன்கள் குறித்த சிந்தனைகளில் புரளத் துவங்கும் குரங்கு மனம்.. 
அதுவுமற்று இதுவுமற்று எதுவுமற்று அனைத்தும் பஸ்பமாகும் என்பதை எமது தீர்க்க தரிசனம் அறியும் என்கிற போதிலும் அவ்வாறான "நிபுணத்துவ மாயை" யில் சற்றே கிடப்பது .. ஒருவித லாகிரி வஸ்துவில் தன் நிலை மறந்து கிடப்பதற்கு ஒப்பான ஒருவித போதை ஷணங்கள் .. 

சத்தியமாக நிபுணத்துவம் பெற்று சாதிக்கிற ஒரு பண்டிதத்துவ நிலை இவ்விதமாக இல்லாமல் வேறொரு நேர்த்தியான தளத்தில் பயணிக்கக் கூடும்.. 
நானுமே கூட அவ்வப்போது இந்த நேர்த்தியான தளத்திலே பயணிக்கிற ஆவல் மூண்டு செவ்வனே பயணிப்பதாக நம்பிக் கொண்டு அற்புதக் கற்பனையில் கண்கள் மூடிக் கிடப்பேன்.. !!

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...