Tuesday, February 16, 2016

6ஆம் அறிவுத் தொந்தரவுகள்..




சோற்றுப் பருக்கைகள்
காலில்  மிதிபடுகையில் கூட 
என்னவோ மலம் 
மிதித்துவிட்ட துரிதகதியில் 
ஓடிச்சென்று கால்களைக் 
கழுவுகிறோம்.. 

என்றேனும் மலத்தினை 
மிதித்து விட நேர்கையிலும் கூட 
அது ஒரு மனிதனின் 
செரிமானமான உணவென்கிற 
அறிவியலை ஏற்க மறுத்து 
அசூயை கொண்டு 
கழுவ ஓடுகிறோம்.. 
Image result for aversion
எந்த உயிரினங்களுக்கும் 
பரஸ்பரம் 
அவைகளின் மலம் 
அருவருப்பு ஏற்றுவதில்லை.. 
மனித இனத்துக்கு மாத்திரம் 
தான் இன்னொருவனின் 
உணவு முறைகள் கூட 
அவன்  உண்ணும் 
முறைகள் கூட 
குமட்டல் ஏற்படுத்தி விடுகின்றன.. !!
Image result for aversion

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...