Wednesday, September 23, 2015

அம்மாக்களின் சுபாவங்கள்..

அங்கொன்றும் 
இங்கொன்றுமாய் 
பிஞ்சுப் பாதங்களின் 
ஒற்றை செருப்புக்கள் 
பாதை எங்கிலும் 
அனாமதேயாமாய்க் 
கிடக்கின்றன.. 

அம்மா மடியில் 
அயர்ந்து போய்  
அப்படியே நழுவி 
இருக்கக் கூடும்.. 
அல்லது 
தெரிந்தே கூட 
நழுவி .. 
சொல்லத் தெரியாமல் 
பார்த்துக் கொண்டே கூடப் 
போயிருக்கும்.. 

வீட்டிற்குப் போய் 
இறங்கும் போது தான் 
காலிலுள்ள ஒற்றை 
செருப்பை அம்மா 
கவனிப்பாள் .. 
'சனியனே.. இப்பத் 
தான் வாங்கிக் 
கொடுத்தோம்.. அதுக்குள்ள 
தொலச்சுட்டியே'
என்று திட்டுவதை 
எதற்கென்று புரியாமலே 
அழும்.. 

மறுபடி மற்றொரு ஜோடி 
செருப்பு.. 

குழந்தையே 
தொலைந்து போய்க் 
கிடைத்தாலும் 
'சனியனே எங்க 
போயித் தொலைஞ்சே?'
என்று திட்டிவிட்டு 
பிறகு அதற்கும்  
சேர்ந்தாற்போன்று 
கொஞ்சுவது தான் 
அம்மாக்களின் சுபாவங்கள்.. !!
Image result for mother and child

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...