Tuesday, September 22, 2015

ர "களைகள்"....

ராவணனை 
ஹிட்லரை 
கோட்சேவை 
நல்லவர்கள் என்று 
சூளுரைக்கிற 
கெட்டவர்கள் 
இருக்கத் தான் 
இருக்கிறார்கள்.. 

ஆனால் 
காந்தியைக் கூட 
அவதூறு சொல்கிற 
ஹிம்ஸாவாதிகள் 
குறித்துத் தான் 
நமது கவலைகள் 
யாவும்.. 

பிச்சை 
எடுப்பதை 
ஊக்குவிக்கத் 
தெரிந்தவர்களுக்கு 
தர்மம் குறித்த 
பிரக்ஞை 
எங்கனம் இருக்கப்
போகிறது ?

நீர்நிலையின் 
அமைதியை 
சலனப் படுத்தி 
சிற்றலை நிகழ்த்தும் 
ஆவல் தென்றலுக்குக்  
கூட வந்து விடுகிறது..!

பிடுங்கி வீசவேண்டிய 
களைகள் 
வழிநெடுக வாழ்வுநெடுக 
வீற்றிருந்தாலும் 
நல்லவைகளை 
அடையாளப் படுத்த 
அவசியமாகி விடுகிற 
வினோதம் 
சுவாரஸ்யமே..!!

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...