Friday, September 18, 2015

ஒரு தடவை செத்துப் போனப்ப.....

சுவாரஸ்யமான நாவலின் 
கடைசிப் பக்கம் 
கிழிஞ்சு  போயிருப்பது போல.. 

தரம் விலை 
எல்லாம் உயர்ந்த 
சொக்காய் ஒன்றுக்கு 
நான்காம் வரிசை 
பட்டனுக்கான காஜா 
எடுக்க மறந்திருப்பது போல.. 

டுபாக்கூர் என்று 
நினைத்திருந்த ஒரு கம்பெனி 
திடீரென்று 
'இலவச சிங்கப்பூர் பயண'
அறிவிப்பில் மூர்ச்சையாக்கி 
கிறங்கி மயங்கி.. 
-- பயண நாளில் 
துரிதகதியில்
பயண ஏற்பாடு நிகழ்ந்து 
கொண்டிருக்கக் கொண்டிருக்க.. 
அப்பனப் பெத்த அப்பத்தா 
பொசுக்குன்னு மண்டையப் 
போட்டது போல.. 

இப்டியே நெகட்டீவ் 
அடையாளங்களை அடுக்கிக்கிட்டே 
போயி.. 
செத்து மின்மயானம் 
தூக்கிக்கிட்டுப் போனா 
பவர் கட்டு.. ஜெனரேட்டர் ரிப்பேர்.. 

சரி, பொதச்சுடுவோம் னுட்டு 
ஏற்பாடாகி 
குழியத் தோண்டி.. 
'தொபுக்கடீர்' னு 
என்னைப் போட்டுட்டாங்களாம்.. 
நல்லவேளை, செத்துக் 
கெடந்ததால 
வலியோ வீக்கமோ இல்லாமத் 
தப்பிச்சுட்டதா  
பேசிக்கிட்டாங்களாம்...!!

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...