Sunday, September 20, 2015

வாஞ்சை..

சிக்கு நான் 
பிஸ்கட் சாப்பிட்டுக் 
கொண்டிருந்த போது.. 
வாஞ்சையோடு 
வாலாட்டிக் கொண்டு 
வந்து நிற்கிறது
சென்ற மாதம் என்னைக் 
கடித்து .... தொப்புளைச் 
சுற்றி ஊசிகள் போடச் 
செய்த அந்த 
காவி வண்ணத் தெருநாய்.. 

பற்பல பணி நிமித்தங்கள் 
நடுவே 
நாய்க்கடி மருத்துவத்தையும் 
கவனித்தாகவேண்டிய 
அவஸ்தைகளும் சூழ்ந்து 
எமது சூழலை 
இம்ஸிக்கச் செய்த 
நாயை .. 
தக்க தருணம் பார்த்து 
கழுத்தறுக்க என் 
மனிதபுத்தி ஆயத்தமாயிற்று.. 

வசமாக இன்று 
மாட்டிக் கொண்டதாக 
பீறிட்டுச் சிலிர்த்தது மனது.. 

'கடிச்சுட்டு வெக்கமில்லாம 
பிஸ்கட்டுக்கு வந்து வேற 
வாலாட்டுற நீ?' 
என்று முனகின உதடுகள்.. 

சப்தமில்லாமல் 
பின்புறக் கதவைத் 
திறந்து .. கைக்குச் சிக்கிய 
இரும்புத் தடி ஒன்றை  
எடுத்துக் கொண்டு 
நாய் நின்று கொண்டிருந்த 
முன்வாசலுக்கு வந்தேன்.. 

நான் பிஸ்கட் எடுக்க 
உள்ளே சென்றிருப்பதாகக் 
கருதி அது இன்னும் 
வாலை ஆட்டியவண்ணமே 
நின்றிருந்ததைப் பார்க்கையில் 

-உடனடியாக 
இரும்புத் தடியை கீழே போட்டுவிட்டு 
கையிலிருந்த 4 பிஸ்கட்டுகளை 
மட்டுமே போட முடிந்தது.. 

என்னைக் கடித்த வாய்
பிஸ்கட்டில் லயித்திருக்க 
அதன் நெற்றியை 
நீவுவதில் 
எனது வாஞ்சையும்  
நாயைப் போன்றே 
சிறந்து விளங்கிற்று.. !!

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...