Friday, September 4, 2015

தனி ஒருவன் ------------[சினிமா விமரிசனம்]

இடை வேளை  வரையிலுமாக அம்புலி மாமா கதை போன்று நகர்கிற கதை, இ.வே க்குப் பிற்பாடு சுஜாதா ஸ்டோரி மாதிரி மிக நயமாக நகர்கிறது.. 

சமீபத்திய டிரெண்டாக ஜெயம் ரவி, இந்த நாட்டைத்  திருத்துவதான பாத்திரங்களில் அதீத அக்கறை காண்பிப்பது சற்றே அமெச்சூராகத் தென்பட்டாலும் இந்த ஒரு கான்ஷியஸ் வெல்கம் செய்ய உகந்ததாகவே தோன்றுகிறது..
Image result for thani oruvan stills
வில்லனாக அரவிந்த்சாமி ... அதற்குரிய முகமோ, அவருக்கான தந்தையோ சற்றும் சம்பந்தமில்லாமற் தெரிந்தாலும், இப்படியான ஒரு மாறுதல் அவருடைய வெர்ஸாடிலிட்டி யைப் பின்னிப் பெடலெடுத்துக் காண்பிக்கிறது.. 

நயன்தாராவின் அந்த வீச்சான நடிப்பையும் புகழ்ந்தாக வேண்டும்.. இந்தக் கதையின் ஆழத்தை நன்கு அப்சார்ப் செய்து, அதற்குரிய விதத்தில் தன்னுடைய பாத்திரத்தை மெருகேற்றும் விதமாக செய்திருக்கிற அவருடைய பாங்கு, அற்புதம்.. அந்த ரெடிமேட் ஸ்மைல் மற்றொரு ப்ளஸ்.. 

நூறு சதவிகித சினிமா தனம் ஆரம்பம் முதல் நிறைவு வரைக்குமாக அப்பட்டமாகத் தெரிந்தாலும் அவ்வப்போது இந்த சமுதாயத்தின் மீதான பிரக்ஞைகளும், அதில் விழைகிற தீமைகளை செவ்வனே களைந்தாக வேண்டுமென்கிற அவசரங்களும் திரைக் கதையை இம்சை இல்லாமல் இழுத்துச் செல்கிறது.. 

இசை, துஷ்ப்ரயோகம் செய்யப் படாமல் அவ்வப்போது தேவையான சமயங்களில் மாத்திரம் வந்து நமது காதுகளை இம்சிக்காமல், மொத்தத்தில் சவுண்டு பொல்யூஷன் இல்லாமல் இருப்பது மிக ஆறுதல்.. அந்த ஹிப்ஹாப் இசை அமைப்பாளருக்கு ஒரு பாராட்டு.. அந்த "கண்ணாளனே " மெலடி கூட கேட்க இதம்.. பிக்ச்சரைசெஷன் செம... 

ஒரு ஜெனுயினான பிராண்டட் மொபைல் போன்று இந்தப் படம், அதீத டெக்னிக்கல்  ஸ்பெஸிஃபிக்கேஷன் நிரம்பி வழிகிறது.. 

உடன் வருகிற அந்த சிநேகிதப் பட்டாளங்களும் இந்தக் கதைக்கு ஈடு கொடுத்து  அரும்பாடு பட்டுக் கலக்கி இருக்கிறார்கள்.. 
Image result for thani oruvan stills
இன்னும் ஏதாவது படத்தின் ஹைலைட் விட்டுப் போயிருந்தால், அது என்னுடைய  கவனமின்மையே தவிர வேறென்ன?.. 

படம், மிக கவனமாகவும், இண்டெலிஜென்ஸ் கன்டென்ட் ஆகவும் பிரம்மாண்டமாயும் பிரம்மிப்பாயும் உள்ளது.. 

மன்னிக்க முடியாத ஒரே விஷயம் சற்று வன்முறையின் தூக்கல்.. 
அதுவும் அநேகமாக ஆந்திராவுக்குத் தேவையான மிளகாய் என்று நினைக்கிறேன்.. ஆனால், தமிழர்களுக்கு சற்று அதிக "காரம்" தான்.. 

இவ்ளோ மெனெக்கெட்டு சொல்லி,  படத்தின் டைரக்டரை மறந்தது  எனக்கே  ஆச்சர்யம்.. யெஸ் .. ஜெயம் ரவியின் சகோதரர்  ராஜா முன்னர். மோகன் ராஜா  இப்பொழுது.. ஆஸம்  பாஸ் .. இதே மாதிரி இனி கன்டினியூ  பண்ணுங்க.. 

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...