Sunday, October 4, 2015

எழுதுபவர்களுக்கு ஒரு வேண்டுகோள்..

வள்ளுவனுக்கோ பாரதிக்கோ எந்த "பிளாகு"களும் இல்லை, ஃபேஸ் புக்கும் இல்லை.. ஆனால் அவர்கள் எழுதிக் குவித்தவையோ சொல்லி மாளாது..

சொந்தமாக அவர்களது கைகளில் எழுதுகோல் இருந்திருக்குமா, இருந்திருந்தாலும் "இன்க்" இருந்திருக்குமா அதனையும் இரவல் வாங்கி எழுதிக் குவித்தனரா, நன்கு எழுதிக் கொண்டிருக்க இருக்க இரவல் கொடுத்தவர் ஓடி வந்து வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டனரா?...
Image result for WRITING
யாவும் கற்பனையாக சொல்கிறேன் எனிலும், இவை எல்லாம் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை என்று ஆணித் தரமாக வாதங்கள் வைக்க முடியுமா?

வள்ளுவன் மனைவி வாசுகி கணவன் சொல் தட்டாதவள், கிணற்றில் வாளியில் ஜலத்தை இரைத்துக் கொண்டிருக்க இருக்க வள்ளுவன் வா என்று அழைத்ததும் அப்படியே விட்டுவிட்டு ஓடியதாகவும் அந்த வாளி ஜலம் அந்தரத்தில் அப்படியே நின்றதாகவும் வரலாறுண்டு..

மயிலாப்பூரில் பிறந்தாரா அல்லது இன்னபிற பிராந்தியமா என்பதிலும் இன்னும் குழப்ப விவாதங்கள் உண்டு..

இப்படி அனுமானங்கள் பலவற்றில் நான் மேற்சொன்ன விஷயங்களும் என்றேனும் ஒரு நாளில் நிகழ்ந்திருக்க வாய்ப்பற்றா போயிருக்கும்?..

அதனோடு ஒப்பிடுகையில் இன்றைய காலகட்டங்களை ஒப்பீடு செய்து பார்ப்பின், பிரம்மிப்பு புரண்டோடுகிறது..

ஓலைச் சுவடியிலே 1330 குரல்களை எழுதிய வள்ளுவனாகட்டும், அபரிமித கவிதைகளை சளைக்காமல் எழுதிக் குவித்த பாரதி ஆகட்டும்.. இவர்கள் போன்று அக்காலத்தில் பற்பலரும் இவ்விதமே தான் எழுதிக் குவித்தனர்.. 
Image result for WRITING
ஆனால் இன்று எழுதுவதற்கு உபகரணங்கள் பல்கிப் பெருகி விட்டன.. இன்னும் கணினி என்ற ஒன்று வந்த பிற்பாடு எழுதுகிற பேனா பென்ஸில் பேப்பர் போன்ற  உபகரணங்களும்  பின்தங்கி அனேக விரல்களும் கீ-போர்டையே  பின்னிப் பிசைகின்றன.. 

நாம் என்ன கருமாந்திரத்தை எழுதிக் குவித்தாலும் அது நமது கை எழுத்துப் போன்று கசமுசா வென்று இல்லாமல் தெளிவாக இருக்கிறது.. அதை அப்படியே பிரிண்டரில் அச்சிடுகிறோம்.. அசட்டு விஷயங்களும் அனர்த்த விஷயங்களும் கூட சும்மா தேஜஸ் ததும்பி வழிந்து.. பார்க்கிற நபர்களை கொள்ளை இட்டு விடுகின்றன.. 

யார் வேண்டுமானாலும் எதனை வேண்டுமானாலும் எழுதுகிற சுதந்திரங்களும், அதற்கொரு 'கவர்ச்சி ததும்பும்' தலைப்பிட்டு கிரானைட் போட்ட மாதிரி முகப்பட்டை தயாரித்து 100 பக்கங்கள் நிரப்பி ரூ. 72 என்று விலை நிர்ணயித்து முதல்பதிப்பு மூன்றாம் பதிப்பு என்று நீள்கிற  வினோத அலங்கோலங்களும் மிக சுலபமாக நிகழ்ந்து "எழுத்தாளன்" கோதாவில் நின்று விடுவது சாத்தியமாகி விடுகிறது.. 

ஒரே பாராகிராப் எழுதி நிரப்ப முடியாதவர்கள் BLOG வைத்திருக்கிறார்கள்.. மற்ற அபத்தங்களை போஸ்ட் செய்வதற்கு என்றே பலரும் facebook இல் அக்கவுண்ட் ஓப்பன் செய்கிறார்கள்.. தங்களின் சிருஷ்டி என்று ஒரு துரும்பை வீசக் கூட கூச்சப் படுகிறார்கள்.. 

சிலர் தெனாவெட்டாக எதையேனும் எழுதி அதிகப் பிரசங்கம் செய்யவே பிளாகும் ஃபேஸ் புக்கும் திறக்கிறார்கள்.. 

இப்படி விஞ்ஞானம் வழங்கியுள்ள மிக அற்புதமான வெற்றிடங்களை எல்லாம், நமது அஞ்ஞானங்களால் நிரப்பி அதற்கு 'காலர்களை' வேறு தூக்கிக் கொள்கிறோம். 

நாம் வள்ளுவனோ பாரதியோ ஆகிவிட முடியாது.. 
ஆனால் ஓரளவுக்கு அறிவுப் பூர்வமாக ஓரளவுக்கு உணர்வுகளை வார்த்தைப் படுத்துகிற முயற்சியாக, ஓரளவுக்கு படிப்பவர்கள் ஏற்க முடியும் வகையிலே நிச்சயம்  எதையேனும் அவ்வப்போது எழுதிக் குவிக்க முடியும் என்று மிகவும்  நம்புகிறேன்.. 
நன்றி.. 

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...