Friday, October 9, 2015

காலத் தாய்..

நம்மை ஈன்றவள் 
நடுவிலேயே நம்மை 
விட்டுப் போய் விடுகிறாள்.. 

நிறைவு வரைக்குமாக
நம்மோடு வந்து 
நம்மை அரவணைத்துக் 
கொண்டிருக்கிற 
காலத் தாய்.. 

நம் தாயோடு 
தாயாக நாம் 
பிறந்த நாள்தொட்டு 
நம்மோடு பயணிக்கிற 
காலம் .. 
-நம் தாய் 
சென்ற பிற்பாடும் 
தாயாய் நின்று 
தாலாட்டுப் பாடுகிறது. !

நாம் சென்றாலும் 
காலம் நம்மை 
வழியனுப்பி வைத்தவாறே 
நின்று கொண்டிருக்கிறது.. 

ஆம், 
அவளுக்கு இன்னும் 
எத்தனையோ  தாலாட்டுக்கள் 
பாட வேண்டியுள்ளது.. !

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...