Monday, November 24, 2014

கமல்ஹாசன் ..

நவம்பர் 7.. கமல்ஹாசன் பிறந்த நாள்.
அன்று முதலே கமல் குறித்தும், அவரது இந்த அறுபது வயது காலம் வரைக்குமான சாதனைகளையும் என்னால் முடிந்த வரைக்கும் சொல்லிப் பார்க்கலாம் என்றொரு அவா பீறிட... ஆனால் அது இயலாமலே போய் விட்டது..    

பிறந்தநாள் முடிந்து இரண்டு மூன்று வாரங்கள் ஆகிவிட்டன..
அதனால் என்ன?.. கமல் குறித்து சொல்வதற்கு கால நேர அவகாசங்கள் எதற்கு?

விஜய் , அஜித்தை எல்லாம் டபுள் ஆக்ட் பார்ப்பதற்கே கந்தலாக உள்ளது..
சிங்கிள் ஆக்ட் செய்தாலே. அவர்களது காட்சிகள் மொக்கையாக உணரப் பட்டு, ஹீரோயினையோ , காமெடியனையோ காண்பித்தால் பரவா இல்லே என்று தோன்றுகிற அளவுக்குத் தான் உள்ளனர் இன்றைய சூப்பர் ஸ்டார்கள்..

ஆனால் அன்றைய ஸ்டாரான கமலோ .. இன்று நினைத்தாலும் புல்லரிக்கிற விதமாகத் தான் இருக்கிறார் மனசுள்..
தசாவதாரத்தில் 10 கேரக்டர்கள்.. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரசனையோடு மிளிர்கிற அந்த சூட்சுமம் வேறெந்த தமிழ் நடிகர்களும் கனவோ கற்பனையோ கூட காண்பதற்கு சாத்தியப் படாத வகையிலே அமைந்திருந்தன என்றால் மிகையன்று.. !!

எந்த  பாவமானாலும் சுலபத்தில் அதனைப் பிரதிபலித்துக் காண்பிக்கிற கமலின் திறன்..
அண்ணாத்தே ஆடறார் குத்துப்பாட்டானாலும், வானிலே தேனிலா நளின ஸ்டெப்  ஆட்டமானாலும், சலங்கை ஒலி பரதநாட்டியப் பாடல்களானாலும் தத்ரூபமாக தன்னை அவைகளில் இழைத்துக் கொண்டு பணியாற்றுகிற அவரின்  சாமர்த்தியம் ... அவைகளை வர்ணிக்க வீரியம் போதாது வார்த்தைகளுக்கு.. !

அன்றைய களத்தூர் கண்ணம்மாவில் துவங்கி, நிழல் நிஜமாகிறது போன்ற படங்களில் இலக்கிய கூர்மை பொதிந்த வசனங்களோடு .. பிறகு சப்பாணிக் கிறுக்கனாக  16 வயதினிலே .. ஸ்ரீ தேவி யுடனான காதல் ரசம் ததும்பிய படங்கள்., அப்புறம் காலத்துக்கு ஏற்ற சிற்சில ஆந்திரக் கார மசாலாக்கள்..

இன்றைய நவீன யுகத்துக்கும் சுலபமாக விருந்து படைக்கிற அவரது ஆற்றல் நம்மை எல்லாம்  பிரம்மிப்பில் ஆழ்த்துகிறது..
கமலின் சமகாலத்திய நடிகர்கள் பலர் இருக்கலாம். நம்ம சூப்பர் ஸ்டார் உட்பட.. ரஜினியின் புகழும் சம்பாதியமும் வேண்டுமானால் கமலைக் காட்டிலும் பலமடங்கு எகிறி இருக்கலாம். நான் இங்கே வியாபாரங்கள் குறித்து பேச வரவில்லை..
அடர்ந்த கலைத்  திறன்களும் அவர்களுடைய மேதாவிலாசங்களுமே இங்கே அலசப் பெறுகின்றன..

பலரது ஆற்றல்கள் அடையாளப் படாமலேயே தொலைந்து போயிருக்கின்றன.. அல்லது களவாடப் பட்டுள்ளன.. களவாடியவர்கள் அதனை தன்னுடயாதாக தம்பட்டமடித்து அதன் நிமித்தமாக பிரபலம் கூட ஆகி இருக்கக்  கூடும்..
ஆனால் கமலுக்கு அப்படி எந்த அவதூறுகளும்  நிகழவில்லை என்பது  அற்புத விஷயம். அவரின் ஆற்றல்கள் உணரப் பட்டன.., படுகின்றன..!
அவரிடம் எவரும் களவாட முயன்று இதுவரை ஜெயித்ததில்லை.. அவரது தனித்துவம் என்பது நடிப்பு சம்பந்தப் பட்ட விஷயங்கள் மட்டுமன்று.. பல பரிமாணங்கள்  அவரை நம்மிடம் உயர்த்திக் காண்பிக்கின்றன..
அரசியல் விரும்பாத, அரசியல் புரியாத, அவரது கலைதாகம் , அந்த தாகத்தை இன்றளவும் அவர் ஒரு குழந்தை பால்பசியில் வீறிடுவது போன்ற தாகத்திலேயே  வைத்துக் கையாள்கிறார் என்பது பொருந்தும்..

சினிமாக்களில் சாதிவாரியாக  அவர் கையாண்ட விதம், அதற்கென அவர் பேசிய வசனங்கள் .. என்று பலவகயறா விஷயங்கள் பற்பல காட்டமான விமரிசனங்களுக்கும் எதிர்ப்பலைகளுக்கும் ஆளாகி, அவரை தர்மசங்கடங்களுக்குள் மூழ்கிடச்  செய்துள்ளன.., அந்தத் தடைகளை எல்லாம் சுலபத்தில் களைந்து விட்டு தமது கருத்துச் செறிவுகளை திரையில் மிளிரச் செய்த அவரின் மாண்பு மகத்தானதே..!!

 அவருக்கு வாய்க்கப் பெற்ற மனைவிகள், மகள்கள், மற்றும் இதர
தனிப்பட்ட அவரது வாழ்வுச் சூழல்கள்.. அவருக்கு தலைகுனிவையோ , நிமிர்ந்து  நடக்கிற வகையிலோ எவ்விதம் வேண்டுமாயினும் நிகழ்ந்திருக்கலாம்.. அவைகளைப் பொருட்டாக்கி அவரது கலை உணர்வுகளைக்  கொச்சைப் படுத்த முயல்வதோ, இன்னபிற துஷ்ப்ரயோகம் செய்வதோ  மற்றவர்களுக்கு மிக எளிதான நடைமுறை.. ஆனால், அதன் நிமித்தமாக ஒரு தேர்ந்த  கலைஞன் காயப் படக்கூடுமே என்கிற கவலையோ பயமோ கிஞ்சிற்று கூட அற்ற அவருடைய எதிராளிகள் மிகப் பெரும் வன்முறையாளர்களே எனில் அது மிகையன்று..!!

சூரியனையே கூடக் குறைகூறும் கயவர்கள் இருக்கத்தானே இருக்கிறார்கள்??  ஆனால் அன்றாடம் சூரிய நமஸ்காரம் செய்கிறவர்களும் அதைவிட அதிகம் பேர் இருக்கிறார்கள்  என்பதை ஞாபகம் வைப்போம்.. !!

3 comments:

  1. சகலகலா வல்லவன் என்பதில் சந்தேகமில்லை...!

    ReplyDelete
  2. நல்ல கலைஞனுக்கு நல்ல கவிஞரின் வாழ்த்துரைகள்..

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...