Sunday, November 16, 2014

எச்சரிக்கைமணி ....

களிர் பேருந்துகள் போன்று மகளிர் கோவில்கள் வரவேண்டும்.. 
ஆண்களுக்குத் தனி என்பதாக கோவில்கள்.. 
அங்கே பக்தி எண்ணங்கள் மாத்திரமே பிரசன்னமாகும்.. எதிரினங்களின் அவஸ்தை அற்று இரு பாலரும் தத்தம் பிரார்த்தனைகளை கடவுளின் முன்பு சமர்ப்பித்து விட்டு வெளிவருகிற வாய்ப்பாக அது அமையும்.. 

அல்லது குறைந்த பட்சம் இந்தக் கோவில் இந்தக் குறிப்பிட்ட நாட்களில் பெண்கள் மட்டுமே அனுமதிக்கப் படுவர்... வேண்டுமானால் தம்பதி சகிதமாக வரலாம்..  தனித்து வருகிற ஆண்களோ பெண்களோ வேறு வேறு நாட்களில் தான் அனுமதிக்கப் பெறுவர் .. 

நடைமுறைக்கு ஒவ்வாத, சாத்தியப் படாத இப்படியான திட்டங்கள் மனசுள் சூழ்கின்றன.. 
ஏனெனில், கோவில்களில் பக்தியைக் காட்டிலும் காமம் கரைபுரண்டோடுகிறது.. சபலிஷ்டுகளின் ஆதிக்கம் பெருவாரியாக இருப்பதை கவனிக்க நேர்கிறது.. உண்மை பக்தியோடு வருகிற சிலரின் மனங்களைக் கூட சலனப் படுத்துகிற விதமாக தவறானவர்கள் நடந்து கொள்கிறார்கள்.. 

நமது ஹிந்துக் கோவில்களுக்குப் போய் விட்டுத் திரும்ப மசூதி வழியாக வருகையில் அங்கே நிகழ்கிற தொழுகைகள் ஆண்களை மட்டுமே சார்ந்து நிகழ்வதால் இவ்வித அவா நமக்கும் எழுகிறதோ என்று தோன்றுகிறது.. 
பெண்களற்ற அந்தப் பிராந்தியம் ஆண்களின் பக்தி எண்ணங்களில் திளைப்பதாகப் படுகிறது.. 

இந்த வரைமுறை நமது கலாசாரத்தில் இழந்து காணப் படுவது புதிராக உள்ளது.. இதே முறை, நமது பக்தி மார்க்கத்திலும் புகுந்திருக்கும் பட்சத்தில் கோவில்கள் மன அழுக்குகள் குவிந்து காணப் பட்டிருக்காது.. 

ஐயப்பன் கோவிலுக்கு  மாலை அணிந்து போவது கூட உண்மையான பக்திப் பிரயாணமாக மனசு ஏற்கிறது.. ஒருக்கால் அந்தக் கோவில் நமது மாநிலம் பெயர்ந்து  கேரளத்தில் வீற்றிருப்பதால் அவ்வித ஒழுக்கவிதி கைகூடிற்றோ என்னவோ .. இருக்கலாம்..  .அதுவே நமது மாநிலத்தில் அமைந்திருக்கும் பட்சத்தில்  விதிகள் இன்னும் தளர்த்தப் பெற்று வேறு பல வக்கிரங்கள் நிகழ ஏதுவாக  அமைந்திருக்கலாம்.. நல்லவேளை.. !

அம்மாவாசை, பிரதோஷம், பவுர்ணமி என்று மாதங்கள் தோறும் தொடர்ந்து வருகிற  விழாக்கால கோவில் கூட்டங்களில் .. சரி , இருபாலருமே வரட்டும்.. 
ஆனால், பெண்கள் வலதுபுறம், ஆண்கள் இடதுபுறம் என்கிற ஒரு முறை கூட தீவிரமாக  பின்பற்றப் படாத விதமாக எல்லாரும் கலந்து இருபுறங்களிலும் அலைமோதுகிற விதத்திலேயே  கோவில் நிர்வாகங்கள் அனுமதிப்பது என்ன நியாய முறை என்று புலனாகவில்லை.. !

வியர்வைக் கசிவினூடே விபூதி வாங்க அவசரப் படுவதும், அதிலே தள்ளுமுள்ளு நடந்து பெண்களின் உபகரணங்கள் களவாடப் படுவதும் பிறகு குய்யோ முறையோ  என்று புலம்பித் தீர்ப்பதும், .. இதே விதமாக, பிரசாத விநியோகங்களின் போதிலும் .. 'குப்பைத் தொட்டியில் எச்சிலை விழுந்ததும் அதனைக் கவ்வ  தெறித்தோடுகிற நாய்க் கூட்டங்கள் '  போன்று முந்தியடிப்பதும்.. 

மிக சாதாரண அடிப்படை ஒழுக்கங்கள் கூட நாமின்னும் கற்காத இந்தத் தருணத்தில் .. நமது குழந்தைகள் தமிழ் படிப்பதையும் பேசுவதையும் கூட தவிர்க்கச் சொல்லி  ஆங்கிலத்தில் பிதற்ற வேண்டுமென்கிறோம்.. அதற்காக அகமலர்கிறோம்.. 

எல்லா அநாகரீகங்களையும் ரகசியமாக சுலபத்தில் அரங்கேற்றி விடுகிற நாம், நமது சந்ததிகள் மாத்திரம் உயர் ரக வாழ்வினை அனுசரிக்க வேண்டுமென்று  மெனக்கெடுகிறோம்.. 

நம்முடைய முடைநாற்றம் நமது பிள்ளைகளுக்குத் தெரிய வருகையில் நமது மூஞ்சிகளில் ஒன்று அவர்கள் காரி உமிழ்வார்கள்.. அல்லது அவர்களும் நம்மோடு கைகோர்த்து  சேற்றுள் இறங்குவார்கள்.. !

ஜாக்கிரதை..!!!

2 comments:

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...