Thursday, October 24, 2013

தேங்கா பால் ..

சட்னிக்கு
உடைக்கப் பட்ட
தேங்காய்
இள நீர்ப்
பதத்தில்
பருப்பு இளைத்துக்
காணப்பட்டது..

தெருப் பிள்ளையார்க்குப்
போட்ட ஈடு காய்
பருத்த பருப்போடு
இனித்த சுவையில்
மண்ணில் சிதறி
உருண்டோடிற்று...

கடந்து செல்கிற
வாகனங்களால்
கசங்கி நசுங்கி
மண்ணோடு மண்ணாயிற்று.. !

சற்று முன்னர்
கறக்கப் பட்ட
மாட்டின் பால்
பாலபிஷேகமாக
கற்சிலை மீது
குடம் குடமாக ...

பசிக்கு வீறிடுகிற
குழந்தைக்கான பால்
பாக்கெட்டில் அடைந்து
கிடக்கிறது..
அதுவும் மாடு கறந்ததா
பவுடரில் பிறந்ததா??


1 comment:

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...