Tuesday, November 5, 2013

உயிர் பெறும் மழைத்துளிகள்.....

உன்னைக் காதலிக்க முயன்ற ஓர் மழை நாளில்...

உன்னை நனைக்கிற
மழையின் புன்னகையும்
என்னை நனைக்கிற
மழையின் அழுகையும்
-பரஸ்பரம்
ஆனந்தங்களையும்
ஆதங்கங்களையும்
மௌனமாகப் பரிமாறிக்
கொள்வதை...
எனது இதயம்
மாத்திரமே உணரக் கூடும்?..!

சபிக்கப் பட்ட துளிகளாக
என் மீது விழுந்து
தெறிக்கிறது மழை..

உன் மீதான துளிகளோ
தெறித்து விடப் பிடிக்காமல்
உன்னில் ஊடுருவப்
பிரயத்தனிக்கிறது ....!!

சாக்கடையில் விழுந்திருந்தால்
கூட அப்படி முகம் சுளித்திருக்குமோ
தெரியாது....
என்னை நனைத்து
கடுந்துயர் கண்டது மழை...

உனது அருகாமையில்
விழுந்து உன்னை
ஸ்பரிசிப்பதைத் தவற விட்ட
ஏமாற்றத்தோடு
சாலையில் தவழ்கிற துளிகள்..

உன் தலையில் விழுந்து
கர்வப் பட்ட இறுமாப்புத் துளிகள்..

உன் கழுத்தில் விழுந்து
மார்பினுள் புகுந்து கொண்ட
இங்கிதமற்ற துளிகள்....!!

-மற்றுமொரு மழை நாளில்..

நானும் நீயும்
ஒரே குடைக்குள்ளிருந்தோம் ...!

துளிகள்
நம் கால்களைப் பற்றிக்
கொண்டு கதறின...!!
.Square Abstract Couple With Umbrella Oil Paint Effect canvas wall printed on to a canvas which would be a great edition to any home.    Size : (W30cm X H30cm) X 1

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...