Thursday, November 15, 2012

தினமலர் செய்திக்கு..

கடந்த இரண்டாண்டுகளில் ஐயாயிரம் பேர்கள் ரயிலில் அடிபட்டு சாவு என்கிற தினமலர் செய்திக்கு .. நான் அனுப்பிய வாசகர் கடிதம்..

இதற்கு முக்கிய காரணம் செல்போனே என்பதை சொல்லித்த்தான் தெரிய வேண்டுமா?.. அதென்ன கிரகமோ தெரியவில்லை... எந்த செல்போன் கடையைப் பார்த்தாலும் ஒயின் ஷாப்பை போலவே ஓர் பத்துப் பேர்கள் நின்ற வண்ணமாக உள்ளனர்... லேட்டஸ்ட் மாடல் போனை வாங்கி நண்பர்கள் மத்தியில் பெருமை பீற்றிக் கொள்வதில் ஓர் அலாதி ஆணவம் எல்லாருக்குமே... அப்புறம் தன்னை மறந்தவாறு ரோடு எது, ரயில்வே ட்ராக் எது என்பது புரியாமல் பந்தாவாக காதில் செருகிக் கொண்டு பேசியவாறு போகவேண்டியது.., அப்புறம் போய் சேரவேண்டியது... மேல போயும் கூட ஏதாவது லேட்டஸ்ட் மாடல் ஆப்பிள் போன் வந்திருக்கா , சாம்சங் வந்திருக்கான்னு கேட்டாலும் கேட்டுக்கிட்டு இருப்பாங்க இந்த மக்கா... டெக்னாலஜி வளரவளர சாவு எண்ணிக்கையும் வளர்கிறது என்றே கருதுகிறேன்... போகிற போக்கில் குடும்பக் கட்டுப்பாடு விளமபரங்கள் எதுவும் நமக்குத் தேவைப் படாது.., செல்போன் விளம்பரங்களே போதுமானது., மக்கள் தொகையை பெருவாரியாக குறைத்துவிடும்... ஐயோ ஐயோ... இதற்கெல்லாம் தீர்வு வரவேண்டுமென்றால் செல்போன் கலாசாரம் ஒழியவேண்டும்.., முக்கியமாக இந்த லேட்டஸ்ட் டெக்னாலஜி போன்கள் வரத்து ஒழியவேண்டும்... ஆனால் சத்தியமாக இதற்கெல்லாம் எந்தக் காலத்திலும் சான்ஸே இல்லை... இதனை தடை செய்கிற சட்டமோ உரிமையோ கூட செல்லுபடியாகப் போவதில்லை... நம்ம மந்தை ஆட்டு மனநிலை கொண்ட மக்களும் திருந்தப் போவதில்லை... இந்த உலகம் அழியப் போகுது போகுதுன்னு ஒரு வதந்தி ரொம்ப நாளா உலாவிட்டே இருக்கல்ல?.. அதுக்கான உபகரணம் தான் இந்த செல்போன் போலும்....

2 comments:

  1. சரியா சொன்னீங்க! நல்ல பகிர்வு!

    ReplyDelete
  2. நன்றாக எழுதி அனுப்பி உள்ளீர்கள் சார்...

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...