Monday, November 5, 2012

கிழிசல் ....



டித்தல்  திருத்தலாகவே 
எல்லாமிருக்கிறது 
என்னிடத்தில்...!

ஆரம்பத்திலேயே 
தெளிவைக் கொணர்கிற 
சாதுர்யம் ஏனோ 
பிசகி விடுகின்றன 
எல்லாவற்றிலும் 
எல்லா தருவாய்களிலும்..!!

திருத்துவதென்பதை
ஓட்டுப் போட்டதாக 
உணர்கிறேன்..
ஆதலால்--
என்னிடம் 
திருந்தி இருக்கிற 
எல்லாமே 
ஓட்டுப் போட்ட 
பலவீனத்திலேயே 
உள்ளன...!
                                                                   
திருந்தப் பெறாத 
தவறுகள் கூட 
ஓர் பிரத்யேக 
தேஜஸில் மிளிர்வதாக 
அபிப்ராயம் எனக்கு...

ஆனால் 
பலவீனப் பட்டாலுமே 
கூடப் பரவாயில்லை..
தவறுகளை 
சரி செய்கிற 
சந்தோஷம் 
வேறெதிலுமில்லை..!!

2 comments:

  1. முடிவிலும் அருமையாக உண்மையை சொல்லி விட்டீர்கள்...

    ReplyDelete
  2. உண்மை உண்மை! திருத்தமும் திருந்துதலும் அவசியம் வேண்டும்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...