Saturday, September 8, 2012

காதலின் அடுத்த தளம்..

அங்கும் இங்குமாக காதலர்களைப் பார்க்கும் போதெல்லாம் என்னுள் ஓர் தீரா ஏக்கம்... நமக்கிந்த சுகந்த அனுபவம் வாய்க்காமல் போயிற்றே என்று...
அதற்கான மெனக்கெடல்கள் என்வசம் இல்லை என்று முழுதுமாக சொல்லி விட முடியாது... என் மெனக்கெடல்கள் யாவும் நனைந்த பட்டாசுக்கு நெருப்பைச் செருக முயன்ற மாதிரியே அன்றி வெடிக்கத் தயாரிலிருந்த பட்டாசுகளுக்கு நெருப்பை  நான் காட்டவில்லை... கால ஈரத்தில் அவை நமுத்துப் போயின நாளடைவில்... பட்டாசும் நமுத்து தீக்குச்சியும் நமுத்து ....

என் காதலை வர்ணிக்க முனைகையில்-- என் பேனா- காகிதம், இப்போது இந்த கணினி .. எல்லாமே சத்தமில்லாமல் எங்கேனும் ஓர் மூலையில் மூக்கை சிந்தி அழுதவண்ணம் இருக்கக் கூடுமென்பது எனதெண்ணம்..

ஒரு ஒடுங்குன டப்பா மூஞ்சியை வைத்துக் கொண்டு ஒய்யாரமான ஒருத்தியைக் கவிழ்த்துப் போட்ட அவனுடைய சாதுரியம் எனக்கு அதிசயம், ஆச்சர்யம்... என்ன தேஜஸ் அவனிடம் கண்டாள்  அந்த அழகிய பெண்?.. அவளது கால் தூசின் சமானம் கூட அவன் இல்லை, ஆனால் அவனில் லயித்து...,  தன்னை முழுதுமாக அவனுள் புதைத்து... காதல் புரிகிறாளே ...! செய்வதறியாது திகைக்கிறேன்..!!

-இந்தத் திகைப்பு ஏதோ ஒரு ஜோடியை மட்டுமே கண்டல்ல... ஏகப்பட்ட ஜோடிகள் இந்த தினுசில் தான் இருக்கின்றன...
எக்ஸ்க்ளூஸீ வாக ரெண்டொரு ஜோடி மட்டுமே மிகப் பொருத்தமாக அமைந்திருக்கும்... அதிலொரு ஆத்மதிருப்தி...
எது எக்கேடு கெட்டா எனக்கென்னன்னு மனசு போகுதா?.. நமக்குத்தான் இதெல்லாம் வாய்க்கலே.. வாய்ச்சதாவது  வெளங்குதான்னு ஒரு நோட்டம்    போடறதுல ஒரு  த்ரில்..

இந்தப் பெண் நமக்கு கிடைப்பாளா?.. இவளது தேகம் நம் சொந்தமாகி, இவளை முழுதுமாக வருடி இன்ப ரசத்தில் கிறங்கும் தருணம் நிகழுமா?.. அல்லது எல்லாமே வெறும் ஆசை கற்பனையோடு  முடிவு பெற்று விடுமா?.. ஹய்யோ.."
என்றெல்லாம் சதா கவலை கொண்டு, பசித்தும்  சாப்பிடாமல் படுத்தும் உறங்காமல்,  குளிக்கத் தோன்றாமல், குளிப்பதை நிறுத்த முடியாமல்... இப்படியான பேரவஸ்தைகளுக்குப் பிற்பாடு அந்தப் பெண் தனது மனைவியாக அமைந்தால்..? அதற்கீடு இவ்வுலகில் வேறொன்றுண்டோ??

மனைவி பேரழகியாகக் கிடைத்த பிற்பாடு அவளைக் காதலிக்கிற சுகம் கூட ரெண்டாம் பட்சம் தான்.. முந்தைய அனுபவத்தை ஒப்பிடும் போது ...

ஆனால் காதல்கள் ஆரம்பத்தில் மட்டுமே  கிறக்கம்  நிரம்பி வழிவதாகவும் ஆன் தி வே .. குண்டி துடைக்கிற கல்லாக மாறி நிற்பதை கண்கூடாகப் பார்க்கிறோம், பல இடங்களில்...

பெற்றோரின் மானக்கேடான உணர்வுகளும் அதன் நிமித்தமான சபிப்புகளும் தங்கள் குழந்தைகளை அந்த கதிக்கு நிறுத்தி விடுகிறதோ என்று சந்தேகிக்கத் தோன்றும் அளவு காதலர்களின் வாழ்வு வளமிழந்து போய் விடுவது சற்று வேதனையே..

ஆனால் நகை விற்கிற விலையைப் பார்த்தால், என்னைப் போல-- காதலிக்க வராத குழந்தைகளைக்  கண்டு பெற்றோரே கவலைப் படுமளவு காலம் மாறுகிறதோ என்று  கவலையோடு சிரிக்க நேர்கிறது...

"ஹேய் .. எரும மாடே.. அவன் உன்னைப் பார்த்து எவ்ளோ அழகா ஸ்மைல் பண்ணினான்.. நீ என்ன லூசு மாதிரி எந்த ரியாக்ஷனும் இல்லாம போயிட்டிருக்கே?"
இப்படி, தாய் மகளை -காதலிக்காததற்கு- சங்கடப்பட்டு சலித்துக் கொள்கிற காலம் நெருங்கி விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது, விண்ணை முட்டுகிற விலைவாசிகளும், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக எகிறிக் கொண்டிருக்கிற நகை விலையும் ..

2 comments:

  1. நீங்கள் முடிவில் சொன்னது நடந்தாலும் நடக்கும்... காலத்தின் கொடுமை சார்...

    ReplyDelete
  2. தங்கள் விமரிசனத்துக்கு மிக்க நன்றி .. அதுபோக திண்டுகல்லில் என்னை வரவேற்ற தங்களின் மாண்புக்கும் மிக்க நன்றி திரு.தனபால் அவர்களே..

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...