Friday, September 14, 2012

அபத்தம்...

மிக நான் உன்னிடம்
எதிர்பார்த்ததெல்லாம்
என் மீதான காதல்
கலந்த பார்வைகளை
மாத்திரமே...

உன்னைக் கவிழ்த்துவிட்டதாக
நம்பிக்கையோடு சொன்ன
என்னை
-விருந்து வைக்கச் சொல்லி
நச்சரித்து
இன்பமாகத் துன்புறுத்தியது
நண்பர் குழாம்...

இந்தக் கூத்தெல்லாம்
நடந்து முடிந்து
கிட்டத்தட்ட இரண்டொரு
ஆண்டுகள் கழிந்துவிட்டன...

இன்றைக்கு
என் மனைவி நீ இல்லை..வேறொருத்தி..
உன் கணவன்-
அன்று எனது காதல் வெற்றிக்காக
நச்சரித்து விருந்து வைக்க
சொன்ன நண்பர்களில் ஒருவன்..


No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...