Monday, September 17, 2012

முக்கிய அறிவிப்பு..

நீர்நிலைகளை அசிங்கப் படுத்துவதிலும், பார்த்தாலே அருவருத்துக் குமட்டி வாந்தி எடுக்க வைப்பதிலும் இந்தியர்களுக்கு ஈடு இந்தியர்களே என்பது எனது அசைக்க முடியாத வாதம்..

அமாவாசை நாளில் இறந்து போன நமது முன்னோர் வரக்கூடும் என்கிற ஓர் அனுமானத்தில் ஆற்றோரங்களில் அனுஷ்டிக்கப் படுகிற சடங்குகள் .. தர்மசங்கடங்கள்... நமது எல்லா அசிங்கங்களையும் நீரில் விட்டொழிக்க வேண்டுமென்கிற  விடாப்பிடியான நமது மூட நம்பிக்கைகள்...

நீரில் விட்டுவிட்டால் நம் எல்லா பாவங்களும் தொலைவதான கேவலமான ஓர் ஐதீகம்... 
மனோவியல் ரீதியாக நாம் சுலபத்தில் இயங்குவோம் என்பதை இந்த விற்பன்னர்கள் நன்குணர்ந்து வைத்துள்ளனர்... ஆதலால் தான் மிக சுலபத்தில் அங்குமிங்குமெங்கிலுமாக நாமெல்லாம் ஆட்டுவிக்கப் படுகிறோம்..

இவ்வித மூடத் தனங்கள் குறித்து சிலர் ஓர் வித அசூயையுடனும், இதற்கு நாமும் பலிகடா ஆகிவிடக் கூடாதென்கிற அதி பிரக்ஞையுடனும் இருந்தாலுமே கூட அவரது அருகாமையில் அவரையும் அவரது அபிப்ராயங்களையும் குழிதோண்டி புதைப்பதற்கென்றே சில ஜன்மாக்கள் வலம் வரும்... அவைகளின் கண்டிப்பை மீறமுடியாத ஓர் மாய வலையம் நம்மீது பின்னப்பட்டு ... கடைசியில் ... தண்ணி தெளித்து ஆடு தலையை ஆட்டியே விடுவது போல ... ஓங்கி ஒரே போடில் முண்டத்தை தனியாகத் துடிக்க வைத்து ரசிப்பார்கள் படுபாவிகள்...

ஓர் அறிவுப் பூர்வமான ஆக்கப் பூர்வமான மனிதனே ஈரத்துணியோடு அரசமர விநாயகனை  வலம் வந்துகொண்டிருப்பான், பற்கள் கிடுகிடுக்க..

என்னவோ கருமத்தை செய்து விட்டுப் போ... நதியை ஏனடா நாசமாய்ப் போக வைக்கிறாய்? .. 

வெளிநாட்டு நீர்நிலைகளை கவனி.. அதன் தூய்மை.. அதன் மேன்மை... அங்கெல்லாம் எவரும் சாவதில்லையா? அமாவாசை வருவதில்லையா? அப்படி இருந்தும்  எவ்வித அசிங்கங்களும் நிகழ்வதில்லை... 

ஜப்பானின் பைக்கை காரை தன்வசப் படுத்தி பந்தா காண்பிக்க மாத்திரம் மனசு  பாடுபடுகிறதே தவிர , அவர்களது தனிமனித ஒழுக்கத்தை, சுகாதாரத்தை, சுயமரியாதையை கடைபிடிக்க வேண்டுமென்கிற உணர்ச்சி நம்மில்  மேலோங்காதது , ஓர் கீழ்த்தரமான செயல் என்பது கூட நமக்கு  உறைப்பதில்லை... 

3 comments:

  1. அவரவர்கள் உணர வேண்டும்...

    ReplyDelete

  2. நன்றாக இருந்தது வாசிப்பதற்கு .வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  3. வாசித்து விமரிசித்த நல்ல உள்ளங்களுக்கும், மனசுக்குள் மாத்திரம் பாராட்டி விமரிசிக்க முடியாத உள்ளங்களுக்கும், எமது நன்றிகள் உரித்தாகின்றன..

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...