Tuesday, January 10, 2012

உளறல்களும் கிறுக்கல்களும்..




அரிய நிகழ்வுக்கான
காத்திருப்பில் உள்ள
 சுவாரஸ்யம்
அது நிகழ்கையில் கூட
இருப்பதில்லை எவர்க்கும்..

சாத்தியங்களும்
நிதர்சனங்களும்
வரவேற்கத் தக்கவையே
எனிலும் - அவைகளுக்கான
போராடும் களங்கள்
கேலிக் குரியவை அன்று...

மூணாங்கிளாசில்
நாலும் நாலும் ஏழு
என்றதற்கு நாள்முழுதும்
என்னை கால் கடுக்க
வெளியில் வெயிலில்
நிற்கவைத்த
கணக்கு வாத்தியின் மகன்
என் ஆபீஸ் அக்கவுண்டை
மெயின்டைன் பண்ணுகிற
சிப்பந்தி...!

மனிதனை மனிதன்
பழி வாங்குகிற
தன்மை மாறி
காலமே அதனை
செவ்வனே நிறைவேற்றுகிற
அதிசயங்கள் அன்றாடம்
சாதாரண நிகழ்வுகளாகிவிட்டன..!!

ஆனால் இந்த
அடையாளங்கள் எதனையும்
பொருட்படுத்தாமல்
சமத்துவத்தை மட்டுமே
நோக்கமாக்கி விடுகிறது
மரணம்...
மிக யதார்த்தமாக.!!


சுந்தரவடிவேலு..

2 comments:

  1. அழகான ஆழமான வரிகள்... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

    என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com

    ReplyDelete
    Replies
    1. very thank you rishvan for yr energetic comment..

      Delete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...