Thursday, January 5, 2012

மார்கழி அனுபவம்



பல்துலக்க மறந்த
சில மார்கழி
அதிகாலைகளில்
நடைப் பயிற்சிக்கு
வீதியில் செல்கையில்
கோவிலுக்குச்
சென்று விட்டுக்
கையில் பிரசாதத்தோடு
எதிர்ப் படுபவர்கள்
அதனை எனக்கும்
விநியோகிக்கையில்
மறுதலிப்பதில்லை நான்...

சுவாமி பிரசாதத்தை
பல்துலக்காமல் சாப்பிடுகிறோமே
என்கிற குற்ற உணர்வெல்லாம்
அதன் ருசியில் லயிக்கையில்
காணாமல் போய் விடுகிறது...

இதற்காகவே அடுத்தநாள்
பல்துலக்கி .. பிரசாத
கனவில் நடந்தோமேயானால்
உள்ளங்கை விபூதியை
மட்டும் நீட்டுகிறார்கள்...      


சுந்தரவடிவேலு..

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...