Monday, January 2, 2012

காமம் குறித்து ......2

சில நபர்கள் இருக்கிறார்கள்... தனது மனைவியுடனான புணர்ச்சியை யதார்த்தமாக நண்பர்கள் மத்தியில் எடுத்தியம்புபவர்கள்...
இருவரும் மிகத் திருப்தி கொண்டதாகவும்...
 தனக்கு மட்டுமே திருப்தி ஆனதென்றும்...
லாட்ஜ் வைத்தியர் சொன்ன லேகியம் சாப்பிட்டும் திருப்திப் படுத்த சாத்யப் படவில்லை என்றும்...
பல வகையறா பரிமாறல்கள் நண்பர்கள் மத்தியில் நிகழும் அன்றாடம்...


மனைவியின் இமேஜ் ஸ்பாயில் ஆகிவிடும் என்கிற இங்கிதம் தெரிந்த சிலர் இது குறித்து விவாதிப்பதைத் தவிர்க்கக் கூடும்...
எதுவுமே செய்யாமல் கூட, தனது ஆண்மையைப் பறைசாற்றுகிற ஆவலில் சிலர் ஏதேனும் பொய் விளிக்கக் கூடும்...
 பல வித்தைகளையும் செய்தவர்கள் எதுவுமே செய்யாதது போல வெறுமே மௌனித்தும் இருக்கக் கூடும்..


பெண்களும் இவ்விதம் தனது தோழிகள் மத்தியில் தன் கணவன் குறித்து பரிமாறிக் கொள்வார்களா என்பதை இதனைப் படிக்க நேர்கிற பெண்கள் எவரேனும் இருக்கும் பட்சத்தில் எனக்கு பின்னூட்டம் போட வேண்டுகிறேன்...


ஆனால் பெண்களும் அவ்விதம் பகிர்ந்து கொள்கிற சுபாவம் உள்ள  நபர்களே என்கிற அனுமானம் ஆண்கள் மத்தியில் உண்டு... 
ஆனால் ஆண்கள் போல அநியாயத்திற்கு பேசித் தொலைக்க மாட்டார்கள் என்றே நான் அனுமானிக்கிறேன்...


ஓர் வயதினை எட்டுகி ற மகனாகட்டும், மகளாகட்டும்.... அவர்கள் குறித்த ஓர் பயமும் சந்தேகங்களும், கவலைகளும் .. இன்னபிற வார்த்தைகளுக்குப் பிடிபடா உணர்வுக் குழப்பங்களுக்கும்  அநேகப் பெற்றோர்கள் ஆளாகி விடுகிறார்கள் என்றே கருதுகிறேன்... 
அவ்வித பயங்கள் மற்றும் சந்தேகங்கள் நிமித்தம் குழந்தைகளுடைய  ஒவ்வொரு நடவடிக்கையையும் கூர்நோக்கும் திறன் பெற்று மன உளைச்சல்களில் மன்றாடுகிறார்கள்.... குழந்தைகளையும் தர்ம சங்கடங்களுக்கு உட்படுத்துகிறார்கள்...


இந்தியாவுடன் ஒப்பிடுகையில் ... மற்ற நாடுகளில் இவ்வித தன்மைகளுக்கு இத்தனை அலைபாய்தல்கள் இருக்காதென்றே நம்புகிறோம்... ஒழுக்கம் என்கிற ஒன்றிற்காக இந்தியப் பெற்றோர் போல வேறெந்த நாட்டிலும் கவலைப் படுகிற சந்தேகப் படுகிற பெற்றோர் இருக்க மாட்டார்கள் என்றே என் அறிவுக்கு எட்டுகிறது... 

இன்னும் இவை குறித்துப் பேசுவோம்..  


சுந்தரவடிவேலு..

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...