Thursday, January 19, 2012

கிழட்டுப் புன்னகை...

ஓர் இழையில்---
அறியாமை அறுபடுகிற
அடையாளமே புரிபடாமல்
"அறிவு" வந்து
அப்பிக் கொள்கிறது
மனசெங்கிலும் 
எல்லாருக்குமே..!!

முன்பிருந்த 
அறியாமைகள் யாவும்
மலரும் நினைவுகளாகவும்
சிறுபிள்ளைத் தனங்களாகவும்
அடையாளப் பட்டு
விடுகின்றன --
தற்போதைய 
அறிவின் நிமித்தமாக..!!

அதே அறியாமைப்
பிராயங்களோடு
உலவி வருகிற இன்றைய
தலைமுறையை 
தரிசிக்க நேர்கையில் 
நமட்டாய் ஓர் 
சிரிப்பு வந்து போகிறது
உதட்டோரம்....

ஆனால் ஏனோ
அந்தச் சிரிப்பை
கிழடு தட்டியதாகவே
உணரத் தோன்றுகிறது..!!!



சுந்தரவடிவேலு    
.

No comments:

Post a Comment

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...