Thursday, January 12, 2012

காமம் குறித்து... 3

எவ்வளவு பேரழகியாக இருந்தாலும் அவள் மனைவி என்கிற போது ஓர் குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகு பிரத்யேகமான சலிப்புத் தட்டி விடுகிற சூழல் ஒவ்வொருவன் வாழ்விலும் மிக யதார்த்தமாக நேர்ந்து விடுவது இயற்கையின் நியதி போல ஓர் விபரீத மாயை ஏற்பட்டு விடுகிறது...

மாற்றான் மனைவி மீதான ஓர் ரம்மிய உணர்வு... தன் மனைவி குழந்தை என்கிற பிரக்ஞை ஒருபுறம் தொக்கி நின்றாலும் பிறன் மனை நோக்குகிற பேராண்மை அற்ற தன்மை அநேகம் பேரினுள் புகுந்து இம்ஸை செய்ய விழைகிறது...

போதை வஸ்துக்கள் மீதான மோகத்தைக் காட்டிலும் ஓர் பெண்ணின் தேகம் என்பது அதீத உணர்வினை ஏற்படுத்துகிற விந்தை ... இறைவனின் படைப்புத் திறன் என்றே சொல்லவேண்டும்... மற்ற போதை வஸ்துக்களை மனிதன் படைத்தான் என்றிருக்க, பெண் என்கிற இயற்கையான போதை வஸ்துவை, அதன் வீரியத்தை, ..." கடவுள் கடவுள் தான்" என்று வாய் பிளந்து பிரம்மித்து நிற்க வேண்டியுள்ளது...

காமத்தை நோயாக்குவதும், அதையே மருந்தாக்குவதும் மனிதனின் சாதுரியத்தில் தான் உள்ளது... விதையினைத் தூவியதோடு இறைவன் பணி நிறைவுறுகிறது... மேற்கொண்டு பற்றிப் படர்ந்து வளர்வதும், ஆனந்தப் பரவசத்தில் நீந்தித் திளைப்பதும் அவனவனுக்கான திறனை சார்ந்தது...

மலரினும் மெல்லிய காமத்தைக் கையாள்கையில் அதே மென்மையைத் திணிக்க முற்படுகையில் காமம் கவிதையாக நம்மில் ஊடுருவக் கூடும்... ஆனால் துஷ்ப்ரயோகம் செய்கையில் அந்த மென்மை நம்மில் விஷ ஊசியாக ஊடுருவி வாழ்வினையே துர்நாற்றமாக்கி விடும்..

எல்லாமே நம்ம கையில் ... புரிந்து செயல்படப் புறப்படுவோம்... ஹிஹி..


இன்னும் பகிர்ந்து கொள்ள முயல்வோம்..



சுந்தரவடிவேலு..

1 comment:

  1. நல்லாத்தான் போய்ட்டிருக்கு...

    //எல்லாமே நம்ம கையில் ... புரிந்து செயல்படப் புறப்படுவோம்... ஹிஹி..


    இன்னும் பகிர்ந்து கொள்ள முயல்வோம்..//

    பகிருங்கள் காத்திருக்கிறேன்.

    ReplyDelete

நிகர் ...

உந் தன் நிமித்தம்  "ஒருதலைக் காதலன் " தகுதி எமக்கு  சுலபத்தில் வாய்த்தது..  இருதலைப்படுத்தும்  முஸ்த்தீபு எதுவுமற்று  ஏக்...